தொடர்ந்து 3 முறை அதுக்கு கூப்பிட்டாங்க.. ஆனால்.. நடிகை பூமிகா ஓப்பன் டாக்..!

தொடர்ந்து 3 முறை அதுக்கு கூப்பிட்டாங்க.. ஆனால்.. நடிகை பூமிகா ஓப்பன் டாக்..!

சினிமாவில் முதல் திரைப்படத்திலேயே அதிகமான வரவேற்பு பெற்ற ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பூமிகா. பத்ரி திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு வெளியான பத்ரி திரைப்படம் அப்போது நல்ல வரவேற்பு பெற்றது.

அதனை தொடர்ந்து அதில் கதாநாயகியாக நடித்த பூமிகாவிற்கும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என்று இரண்டு சினிமா வட்டாரங்களிலும் முக்கிய நடிகையாக பூமிகா இருந்து வந்தார்.

அதற்கு பிறகு 2002 ஆம் ஆண்டு அவர் நடித்த ரோஜா கூட்டம் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பரவலாக வரவேற்பை பெற்ற படமாக இருந்தது. தமிழில் வெளியான கில்லி திரைப்படத்தின் ஒரிஜினல் வெர்ச்ஷனான ஒக்கடு திரைப்படத்தில் இவர்தான் கதாநாயகியாக நடித்திருந்தார்.

வரிசையாக வெற்றி:

மேலும் அப்பொழுது நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் பூமிகா. 2001 முதல் 2010 வரை கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஓரளவு வாய்ப்புகளையும் வரவேற்புகளையும் பெற்று வந்தார் பூமிகா. ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

தொடர்ந்து 3 முறை அதுக்கு கூப்பிட்டாங்க.. ஆனால்.. நடிகை பூமிகா ஓப்பன் டாக்..!

மேலும் அதற்குப் பிறகு திருமணம் செய்து கொண்ட பூமிகா சில காலங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இருந்தாலும் சினிமா தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அவரை விடுவதாக இல்லை.

தொடர்ந்து அவர் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனர் சில இயக்குனர்கள். பூமிகாவிற்கும் மீண்டும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் திருமணத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் கூட அந்த திரைப்படங்களில் கதாநாயகியாக பூமிகா நடிக்கவில்லை.

ரீ எண்ட்ரி கொடுக்கும் பூமிகா:

தொடர்ந்து 3 முறை அதுக்கு கூப்பிட்டாங்க.. ஆனால்.. நடிகை பூமிகா ஓப்பன் டாக்..!

இதனைத் தொடர்ந்து அடுத்து கதாநாயகி ஆவதற்காக உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்தி வருகிறாராம் பூமிகா. தீவிரமாக தற்சமயம் உடற்பயிற்சியில் இறங்கி வரும் பூமிகா இன்னும் சில நாட்களில் திரையில் கதாநாயகியாக தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிந்தியில் நடக்கும் பிக்பாஸ் சீசன் 15 இல் இவர் கலந்துக்கொள்ள இருக்கிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன. அதுக்குறித்து பேசிய பூமிகா பேசும்போது இதுவரை என்னை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அழைக்கவில்லை. அப்படியே கூப்பிட்டாலும் நான் அதற்கு செல்ல தயாராக இல்லை. என்னை ஏற்கனவே மூன்று முறை பிக்பாஸிற்கு அழைத்திருந்தனர். அப்போதே நான் செல்லவில்லை என்கிறார் பூமிகா.