‘உதயன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ப்ரணிதா. அதையடுத்து ‘சகுனி’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் ப்ரணிதா.
இதனைத் தொடர்ந்து ‘மாஸ்’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக ஜெமினி கணேசனும் சுருளி ராஜன் என்ற திரைப்படத்தில் அதர்வாவுடன் நடித்திருந்தார், அதன் பிறகு தமிழில் எந்த திரைப்படத்தையும் நடிக்கவில்லை.
பின்னர் இவர் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வந்தார்.நடிகர் விஜய்யின் கரியரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூலை வாரிக் குவித்த திரைப்படங்களில் ஒன்றான போக்கிரி கன்னட ரீமேக்கில் "பொர்கி" என்ற பெயரில் வெளியானது.
இதில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை பிரணிதா சுபாஷ் இப்போது பல கன்னட திரைப்படங்களில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
"பொர்கி" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று கிட்டதட்ட 100 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து பிரணிதாவின் முதல் படியே வெற்றிப்படியாக மாறியது.
இதன்பின் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் அவர் நடிக்க ஆரம்பித்தார்.சமீபத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால், தற்போது அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Tags
Pranitha Subash