Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

27 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு கணவரை விவாகரத்து செய்த நடிகை ரேவதி..! – இது தான் காரணமாம்..!

நடிகை ரேவதி,( Revathi )  தமிழ் சினிமா வரலாற்றில் பெயர் பெற்ற நடிகை. பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்தும், கவர்ச்சியை சிறிதும் நம்பாமல், நடிப்பால் மட்டுமே, ரசிகர்களின் மனங்களை வென்றெடுத்தவர்.

ரேவதி, டிவி தொடர்களிலும், இப்போது நடிக்கிறார். மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்தவர்.இந்தி, ஆங்கில படங்களை இயக்கிய இயக்குநர் ரேவதி என்ற அடையாளத்தையும் பெற்றிருக்கிறார்.

ஐந்துமுறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்.ஆஷா கேளுண்ணி குட்டி என்பதுதான், ரேவதியின் நிஜப்பெயர், கடந்த 1966ம் ஆண்டில் பிறந்த ரேவதிக்கு, இப்போது 58 வயதாகிறது. கேரளா, கொச்சியை பூர்வீகமாக கொண்டவர்.

ரேவதி
Revathi

கடந்த 1981ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கிய ‘மண்வாசனை’ படம் மூலம், ரேவதி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அடுத்து வைதேகி காத்திருந்தாள், ஆண்பாவம், உதய கீதம், கன்னிராசி, மௌனராகம், புன்னகை மன்னன், தேவர்மகன், புதிய முகம், மறுபடியும், மகளிர் மட்டும், தொட்டாச்சிணுங்கி என பல முக்கிய, வெற்றி படங்களில் நடித்து, ரேவதி தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர்.இப்போதும் ஜோதிகா நடித்த மகளிர் மட்டும், ஜாக்பாட், குலேபகாவலி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் ரேவதி நடித்திருக்கிறார்

நடிகையாக மட்டுமின்றி, இயக்குநராகவும் ரேவதி தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். மித்ர் மை பிரண்ட் என்ற ஆங்கில படம், பிர் மிலேங்கே என்ற இந்தி

படம் இயக்கி இருக்கிறார்.
1992ம் ஆண்டில் வெளிவந்த தேவர்மகன் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை விருதும், 2002ம் ஆண்டில் ரேவதி இயக்கிய மித்ர் மை பிரண்ட் என்ற ஆங்கில படத்துக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது. மேலும், ரேவதி ஐந்து முறை பிலிம்பேர் விருதை வென்றவர் ரேவதி.

ரேவதி
Revathi

புதிய முகம் படத்தில் ரேவதி நடித்த போது, அந்த படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தி சுரேஷ் சந்திரமேனன் என்பவருடன் ரேவதிக்கு காதல் ஏற்பட்டது. இதையடுத்து, 1988ம் ஆண்டில் இருவரது வீட்டிலும், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு, ரேவதி நடிப்பில் ஆர்வமின்றி ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், 14 ஆண்டுகள் கழிந்த நிலையில், 2002ம் ஆண்டில் இருவரும் விவகாரத்து செய்துகொண்டு பிரிந்தனர்.இந்நிலையில், ரேவதி தனது கணவர் சுரேஷ் மேனனை பிரிந்தது ஏன் என்ற தகவல் இப்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ரேவதி
Revathi

நானும், சுரேஷூம் எதிர்பார்ப்பில்லாத அன்பை, காதலை ஒருவர் மீது ஒருவர் கொண்டிந்தோம். எங்களுக்குள் தீவிர அன்பைத் தவிர வேறு எதுவுமே இருந்தது இல்லை. ஒரு கட்டத்தில், வாழ்க்கையில் இருவருமே நல்ல முதிர்ச்சியை அடைந்திருந்தோம்.

எங்கள் இருவரது பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல், எங்கள் திருமணம் நடந்திருக்காது. ஏனெனில், பெற்றோரை நிராகரிக்கும் நிலையில், எங்கள் உறவு இருக்கவில்லை. திருமணத்துக்கு பிறகு, சில ஆண்டுகளில் எங்களுக்குள் பிரிவு நிலை தோன்றியது.

ரேவதி
Revathi

தொடர்பு நிலையில், ஒரு விரிசல் விழுந்திருப்பதை உணர முடிந்தது. அதற்கு பின், நிரந்தரமாக பிரிவது என்ற முடிவை இருவருமே தேர்ந்தெடுத்தோம். ஆனால், இப்போதும் எங்களது தோழமையை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம் என கூறி இருக்கிறார்.

ஆனால், திருமணமாகி பல ஆண்டுகளாகியும், குழந்தை இல்லாததே இருவரது பிரிவுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், சுரேஷ் மேனனை பிரிந்த பிறகு, டெஸ்ட் டியூப் மூலம், ஒரு பெண் குழந்தையை ரேவதி பெற்றெடுத்து, வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version