53 வயசில் கர்ப்பமான நடிகை ரேகா..! அதுவும் எப்படின்னு பாருங்க..!

53 வயசில் கர்ப்பமான நடிகை ரேகா..! அதுவும் எப்படின்னு பாருங்க..!

90 காலகட்டங்களில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேகா. ஜோஸ்பின் என்ற நிஜப் பெயரைக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது பெயரை ரேகா என்று மாற்றிக் கொண்டார்.

தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் இவர் தமிழில் நடித்த புன்னகை மன்னன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கடலோரக் கவிதைகள் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் இவருக்கு என்று ஒரு தனி இடத்தை தந்தது.

மேலும் இவர் கமல்ஹாசனோடு இணைந்து புன்னகை மன்னன் திரைப்படத்தில் நடிக்கும் போது இவரிடம் சொல்லாமலேயே கமலஹாசன் இவருக்கு உதட்டு முத்தத்தை தந்து விட்டதாக இன்று வரை புலம்பி வருகிறார்.

அத்தோடு சத்யராஜோடு இணைந்து நடித்த கடலோர கவிதைகளில் டீச்சராக வந்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இவருக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார்.

பல்வேறு திரை விருதுகளை பெற்றிருக்கும் நடிகை ரேகா 53 வயசில் கர்ப்பமான விஷயம் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனை அடுத்து பலரும் இவர் எப்படி கர்ப்பம் தரித்தார் என்று பல்வேறு விதங்களில் பேசி வருகிறார்கள்.

அத்தோடு 53 வயதில் நடிகை ரேகா கர்ப்பம் ஆனாரா? என பலரும் ஆச்சரியத்தோடு இருக்கிறார்கள். தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் நடிகை ரேகா தற்போது புதுமுக இயக்குனர் மாலதி நாராயணன் இயக்க இருக்கும் மிரி அம்மா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத் போன்ற பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இதனை அடுத்து மிரி அம்மா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளி வந்துள்ளது.

இந்த போஸ்டரில் நடிகை ரேகா கர்ப்பிணியாக இருக்கக் கூடிய போஸ்டரானது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த போஸ்டரை பார்த்து தான் 53 வயதில் ரேகா கர்ப்பமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

மேலும் இந்த படத்தில் வித்தியாசமான கேரக்டரை நடிகை ரேகா செய்ய இருப்பதால் கண்டிப்பாக இந்த படம் வெற்றி அடைவதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற படங்களின் வரிசையில் நிச்சயம் இருக்கும் என கூறலாம்.