இதனால தான் கவர்ச்சி உடைகளை அணிவதில்லை..! – சாய் பல்லவி வெளியிட்ட ஷாக்கிங் தகவல்..!

நடிகை சாய் பல்லவி ( Sai Pallavi ) தற்சமயம் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் முதலாக பிரேமம் எனும் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் இவருக்கு நிறைய ரசிகர்கள் வர ஆரம்பித்தார்கள்.

சாய் பல்லவி

இதனை எடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வெகுவாக வர ஆரம்பித்தன.இந்த நிலையில் இவர் பிரேமம் படத்திற்கு பிறகு தமிழில் மாரி 2, சூர்யாவுடன் என் ஜி கே மற்றும் வெற்றிமாறனின் பாவ கதைகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து சாய் பல்லவி முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துள்ளார்.இதனை அடுத்து தற்சமயம் கார்க்கி எனும் திரைப்படத்தில் நடித்து இந்த படம் பெண்கள் மத்தியில் மாபெரும் வெற்றி படமாக அமைந்த நிலையில் இந்த படத்திற்கு விருதுகளும் வழங்கப்பட்டது. மேலும் இந்த படத்தை இயக்கிய சூர்யாவின் மனைவியான ஜோதிகாவின் நிறுவனமான 2D என்டர்டைன்மெண்ட் இந்த படத்தை வெளியிட்டது.

சாய் பல்லவி

மேலும் இவருக்கு திரைப்படங்களில் நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்த நிலையில் இவர் தற்சமயம் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு நடித்து வருகிறார். கிளாமரில் களம் இறங்காமல் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளங்களை உருவாக்கியுள்ளார்.

சாய் பல்லவி

இன்றைய கால சூழ்நிலையில் கிளாமரில் மட்டுமே நிறைய ரசிகர்களை பெற முடியும் என்ற நிலையை மாற்றி கிளாமர் இல்லாமலேயே நடித்து அனைத்து இளைஞர்களும் தன்வசம் ஈர்த்து வரும் ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வருகிறார்.

மேலும் இப்படியான கொள்கையை கொண்ட சாய்பல்லவி ஏன் கிளாமரான உடைகளில் படத்தில் நடிப்பதில்லை என்பது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,நான் முதன்முதலாக பிரேமம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடனமாடி உள்ளேன், அந்த காட்சி ரசிகர்களால் மிகுந்த வரவேற்பை பெற்ற ஒரு காட்சியாக அமைந்தது.மேலும் இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு நான் ஜார்ஜியோவில் படிக்கும் போது டேங்கோ நடன போட்டிக்காக கவர்ச்சியான உடைய அணிந்து நடனம் ஆடி இருந்தேன்.

அந்த காணொளி தற்சமயம் நான் பிரேமம் படத்தில் நடித்த முடித்த பிறகு அந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. அந்த நிலையில் என்னை நிறைய பேர் பிரேமம் படத்தில் நடித்ததை பார்த்து என்னை திட்டி வந்தார்கள்.

இப்படியான உடைகளில் நடனம் ஆடலாமா என்று கோபப்பட்டார்கள், அப்போது தான் எனக்கு புரிந்தது ஒருவரின் உடையை வைத்து குணாதிசயங்களை மக்கள் கண்டுபிடிக்கிறார்கள்.ஆகவே நானும் இனி கிளாமர் உடையில் நடிக்க மாட்டேன் என்று உறுதி எடுத்தேன். இனி மேலும் நான் கிளாமரில் உடையில் அணிய மாட்டேன் என்று கூறினார்.

சாய் பல்லவி

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …