தமிழ் திரைப்படத்தில் இயக்குனராக திகழ்ந்த எஸ்ஏ சந்திரசேகரின் மகன் தான் இளைய தளபதியாக இன்று உயர்ந்து இருக்கும் விஜய்[Vijay]. இவர் தனது தந்தையின் இயக்கத்தில் உருவான நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.
எனினும் இவர் எதிர்பார்த்த அளவு திரையுலகில் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். எனவே பல சிக்கல்களையும் கடின உழைப்பையும் மேற்கொண்ட அவர் இன்று இளைய தளபதியாக உயர்ந்து இருக்கிறார்.
ஆரம்ப நாட்களில் இவர் நடித்த படங்களில் அதிக அளவு நடிகை சங்கவி நடித்து இருக்கிறார். அதுவும் மழையில் நனைவது போன்ற காட்சிகள் மட்டும் அல்லாமல் படுக்கை அறை காட்சிகளிலும் படு நெருக்கமாக இருவரும் தங்களது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.
விஜய் கேரியர் இந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்ததற்கு காரணம் அவரது தந்தை ஒரு பக்கம் என்றாலும் சங்கவியின் காதல் பலமும் அதற்கு காரணமாக நாம் கூறலாம்.
ஆம் உண்மையில் இளைய தளபதியான விஜய் அடிக்கடி இரவு நேரங்களில் சங்கவி வீட்டுக்கு சென்று இருக்கிறார். இருவர்களிடையே சம்திங் சம்திங் அப்போதே எழுந்தது.
மேலும் விஜய்யோடு சங்கவியும் காதல் கொண்டிருந்ததால் அப்படிப்பட்ட நெருக்கமான காட்சிகளில் மிக நெருக்கமாக நடித்திருக்கிறார்கள்.
இந்த உண்மையை தற்போது பயில்வான் ரங்கநாதன் உடைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் சங்கவி உடன் இருந்த தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று அவரது தந்தையான எஸ்ஏ சந்திரசேகர் விஜய்க்கு எச்சரிக்கை விடுத்ததின் காரணத்தால் தனது முதல் காதல் ஊத்திக் கொண்டது.
மேலும் எந்த ஒரு நடிகையையும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதில் கட்டாயம் காட்டப்பட்ட வேளையில் விஜய்க்கு ரசிகையாக வந்த இலங்கை பெண் சங்கீதாவை பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்.
இதனை அடுத்து இவர்களது இல்லற வாழ்க்கை மிக நேர்த்தியான முறையில் சென்று கொண்டிருக்க கூடிய வேளையில் பழைய கதையை கிளறி பயில்வான் ரங்கநாதன் பலரது முகத்தையும் சுளிக்க வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் பயில்வான் கூறியது உண்மையே என திரையுலக நண்பர்களும் அதை ஆமோதித்து இருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் சச்சரவுகளை தூண்டி விடும்படி உள்ளது.