தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). இந்த தகவல் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.
இதுவரை இல்லாத அளவு இந்த தகவல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறியதற்கு காரணம் இழுத்துப் போர்த்தி நடித்த கீர்த்தி சுரேஷ் வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ளத்தான் இது போன்ற உச்சகட்ட கவர்ச்சியை காட்ட சம்மதித்திருக்கிறார் என்று கோடம்பாக்கமே பேசி வருகிறது.
வாரிசு நடிகையான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களோடு நடித்து தனக்கு என்று ஒரு இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுக் கொண்டவர்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவரை அதிகளவு ஃபாலோயர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள். எப்போதுமே அவர்களை ஒரு டச்சில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை வண்ண வண்ண உடைய அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.
இதனை அடுத்து தற்போது திரைப்பட வாய்ப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்காக இளசுகளை சுண்டி இழுக்க கூடிய வகையில் மொத்த கவர்ச்சியையும் களம் இறக்கி இருக்கிறார்.
தமிழில் வாய்ப்புகள் குறைந்ததின் காரணத்தால் அக்கட தேசத்தில் கடை வரித்திருக்கும் இவர் நடித்த தசரா திரைப்படம் நல்ல தொடக்கத்தை இவருக்கு தெலுங்கில் கொடுத்திருப்பதோடு மக்கள் மத்தியில் பேசும் படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
தனது கண்களாலே ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருக்கும் இவரது ஒவ்வொரு புகைப்படத்திலும் சிவந்த மேனி பளிச்சென்று வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அழனை தொடர்ந்து பார்த்து ரம்யமாக ரசித்து வருகிறார்கள்.
தமிழ் திரை உலகில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் ரெமோ, தொடரி, பைரவா போன்ற பல படங்களில் நடித்து தனது அபார நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிறார்.
மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த நடிகையர் திலகம் திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரிக்காகவே வாழ்ந்து இருப்பார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
இப்படிப்பட்ட நடிகை தற்போது நீச்சல் உடையில் ஒரு வெப் சீரியலுக்காக நடிக்க இருப்பது தான் இணையத்தில் வைவலாக பேசப்பட்டு வருகிறது. இதனை அடுத்து நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துக்களை தற்போது கூறி வருகிறார்கள்.