கர்ப்பிணி ஆட்டை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது.. – அதிர்ச்சி சம்பவம்..!

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கன்ஹாங்காட் (kanhangad) நகரில் கர்ப்பிணி ஆட்டை அடையாளம் தெரியாத மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளனர். கோட்டச்சேரியில் உள்ள ஓட்டலுக்கு சொத்தமான ஆடுகள் கொல்லைப்புறத்தில் கட்டி வைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் கொல்லைப்புறத்தில் இருந்த இரண்டு ஆடுகள் ஒரே மாதிரி கத்தியுள்ளது என ஹோட்டல் ஊழியர்கள் கூறினர்.

கர்ப்பிணி ஆடு ஓன்று இன்னும் ஒரு மாதத்தில் குட்டி ஈன்று எடுக்க இருந்தது. இதனால், கொல்லைப்புறத்தில் ஹோட்டல் ஊழியர்கள் சென்று பார்த்தபோது, மூன்று பேர் ஆடு மீது பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருந்தனர். இதனால் அவர்களை பிடிக்க முயன்றபோது செந்தில் என்பவர் சிக்கினார். மேலும் இருவர் சுவர் ஏறி குதித்து தப்பியோடினர். இச்சம்பவத்தில் கர்ப்பிணி ஆடு இறந்து கிடந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செந்திலை கைது செய்து ஆட்டை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் கூறுகையில், தமிழகத்தை சேர்ந்த செந்தில் என்பவர் கடந்த மூன்றரை மாதங்களுக்கு முன் வேலை தேடி இங்கு வந்தார் என தெரிவித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

இச்சம்பவம் உள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் விலங்குகள் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? இணையத்தை தீப்பிடிக்க வைத்த கௌரி கிஷன்..!

நடிகை கௌரி கிஷன் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள வெப் தொடர் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை வியப்பில் …