தன்னுடைய தோழியும், சக நடிகையுமான ஆர்த்தி சுபாஷை மடியில் அமரவைத்துக்கொண்டு.. இவன் கூட நண்பனா இருந்ததுக்கு இன்னும் குழந்தை மட்டும் பெத்துகல.. அதுக்கு ஏதாவது ஆப்ஷன் இருந்தா அதையும் பண்ணியிருப்பான்.. என்ற சந்தானம் வசனத்திற்கு ரீல்ஸ் விட்டுள்ளார் நடிகை கிருத்திகா அண்ணாமலை.
கடந்த 2005-ஆம் ஆண்டு ஒளிபரப்பான மெட்டிஒலி என்ற சீரியலில் நடிகையாக அறிமுகமான இவர் அதன்பிறகு கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
இடையில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தினார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் அம்மணி.இந்நிலையில், என்னை திருமணம் செய்து கொல்கிறீர்களா..? என்று ஒருவர் கேட்க இது என்னுடைய மகன் என்று தன்னுடைய மகனாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் கிருத்திகா.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிருத்திகா.
தற்போது பாண்டவர் இல்லம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு உடல் எடை கூடி குண்டாக இருந்த இவர் அதன்பிறகு கடுமையான உடற்பயிற்சிகளையும் பயத்தையும் மேற்கொண்டு தற்பொழுது ஒல்லியாக காட்சியளிக்கிறார்.
View this post on Instagram
இந்நிலையில், தன்னுடைய தோழியும் சக நடிகையுமான ஆர்த்தி சுபாஷ்-உடன் இவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.