செவ்வந்தி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் சக சீரியல் நடிகர் அர்ணவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பலதரப்பட்ட பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
மட்டுமில்லாமல் ஒருவர் மீது ஒருவர் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அர்ணவ் குறித்த புதிய ஆதாரம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் நடிகை திவ்யா.
அர்ணவ் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது கல்லூரி அருகில் இருந்த ஒரு ரீசார்ஜ் கடையில் வேலை செய்த பெண்ணுடன் பேசி பழகி அந்த பெண்ணிடம் தனக்கு ரீசார்ஜ் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார்.
அதற்காக அவர் ஒரு முறை கூட பணமே கொடுத்தது கிடையாது. மட்டுமில்லாமல் அந்த பெண்ணை தன்னுடைய அறைக்கு அழைத்து வந்து அவருடன் தவறான உறவிலிருந்து இருந்து வீடியோவும் எடுத்து வைத்திருக்கிறார்.
இரண்டாம் வகுப்பு வரை வீட்டிலிருந்து படித்த அர்ணவ் அதன் பிறகு பள்ளி படிப்பு கல்லூரி என ஹாஸ்டல்லிலேயே படித்திருக்கிறார். அப்பொழுது ஆண்களோடு கூட தவறாக நடந்து இருக்கிறார் என தகவல்கள் வந்திருக்கிறது.
எப்போதுமே தன்னுடைய கைபேசியில் தப்பான படங்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பாராம். அவரோடு அவருடன் படித்த நண்பர்கள் எனக்கே கூறி இருக்கிறார்கள்.
அந்த ரீசார்ஜ் கடையில் வேலை செய்த பெண்ணை தன்னுடைய அறைக்கு அழைத்து வந்து அவருடன் இருந்த வீடியோவை எல்லாம் எடுத்து வைத்து இருக்கிறார் அர்ணவ் என்று அர்ணவ்-இன் நண்பர் எனக்கு சொல்லி இருக்கிறார்.
அதன் பிறகு அந்த பெண்ணை கழட்டி விட்டு விட்டு கல்லூரியில் படிக்கும் பொழுது வேறொரு பெண்ணை காதலித்திருக்கிறார். அந்த பெண் முஸ்லிம் என்பதால் கல்யாணம் செய்து கொள்ளவும் முடிவில் இருந்துள்ளனர்.
ஆனால் அர்ணவ் உடைய அப்பா அந்த பெண் வீட்டில் போய் மிரட்டி அந்த காதலை பிரித்து இருக்கிறார். அதன் பிறகு அர்ணவ்-வை வீட்டை விட்டு அடித்து விரட்டி சென்னைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
திவ்யா வெளியிட்டுள்ள இந்த தகவல் இணையவாசிகளை அதிர வைத்துள்ளது.