உலக அளவில் பிரபலமடைந்த ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடரின் இறுதி பாகம் இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. மணி ஹைஸ்டின் முதலிரண்டு பாகங்கள் 2017-இல் வெளியாகின.
அடுத்த இரண்டு பாகங்கள் 2019-2020-இல் வெளியாகின கொள்ளைச் சம்பத்தை மையமாகக் கொண்டு உருவான இத்தொடரின் காட்சிகளும் கதாப்பாத்திரங்களும் உலகளவில் பிரலமடைந்தது.
குறிப்பாக கடந்தாண்டு கரோனா பொது முடக்கத்தின்போது இந்த இணையத் தொடர் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தது. இதனால், மணி ஹெய்ஸ்டின் முடிவுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில், 5-ம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் பாகத்தின் முதல் அத்தியாயம் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் 5ஆம் பாகத்தின் 2-ம் பகுதி இன்று நெட்பிளிக்ஸில் வெளியானது. எப்படியான க்ளைமாக்ஸ் இருக்கும் என எதிர்பார்ப்புக்கு வழக்கம் போல சுவராஸ்யமான கதை விருந்தை கொடுத்ததுள்ளது படக்குழு.
அரசுக்கும் இழப்பு இன்றி, ஹெய்ஸ்ட் குழுவிற்கும் இழப்பு இன்றி என வித்தியாசமாக கதையை முடித்துள்ளனர். அரசின் பாதுக்கப்புடன், ராஜமரியாதையுடன் மணி ஹெய்ஸ்ட் குழு இந்த கொள்ளையில் இருந்து வெளியேறும் காட்சிகள் காலம் தாண்டியும் நின்று பேசும்.
இத்துடன் மணி ஹெய்ஸ்ட் முடிவுற்றது என்ற விஷயம் ரசிகர்களை ஒரு விதமான சோக மனநிலையில் ஆழ்த்தியிருந்தாலும், இந்த தொடரின் ஃப்ரொஃபஸ்ஸர் கதாபாத்திரத்திற்கு அடுத்த படியாக அனைவருக்கும் பிடித்த கதாப்பாத்திரமான ‘பெர்லின்’-ஐ வைத்து இந்த தொடரை நீட்டிக்க இருப்பதாக நெட்பிளிக்ஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரசிகர்களை இன்னும்மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.