தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளிலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து முன்னணி நாயகி என்கிற இடத்தை தக்க வைத்துள்ளநடிகை சமந்தா, 7 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்ட, நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார்.
சமந்தா கணவரை விட்டு பிரிந்ததற்கு பல காரணங்கள் வெளியானது.சமந்தா ஒரு சுயநலவாதி என்றும், சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்ததாகவும் கருக்கலைப்பு செய்ததாகவும் வதந்திகள் அதிகம் பேசப்பட்டதால் மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளானார்.
இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் சமந்தா விளக்கம் கொடுத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.மேலும் சமந்தா பற்றி அவதூறு பரப்பும் விதமாக விவாதங்கள் மற்றும் செய்திகளை பரப்பிய 3 ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
விவாகரத்தை தொடர்ந்து ஆன்மீக பயணம், யோகா போன்றவற்றில் ஈடுபட்டு வந்த சமந்தா தற்போது மீண்டும் தன்னுடைய உடலை பலபடுத்தும் உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது மிகவும் டைட்டான உடையில் உடற்பயிற்சி செய்யும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள், அடேங்கப்பா.. ட்ரெஸ் எம்புட்டு டைட்டு.. கொஞ்சம் விட்ட கிழிஞ்சுடும் போல இருக்கே.. என்று கலாய்த்து வருகின்றனர்.