பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும், அக்ஷரா ரெட்டி ஒன்னும் தெரியாத பாப்பா போல் இருந்தாலும், இவர் தங்கம் கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டவர் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் தனது வாழ்க்கையில் சந்தித்த ஹீரோக்களை பற்றி பேசினார் அக்ஷரா ரெட்டி.
தன்னுடைய முதல் ஹீரோ தனது அப்பாதான் என்று கூறிய அக்ஷரா ரெட்டி அவர் தான் சிறு பிள்ளையாக இருக்கும் போதே இறந்துவிட்டதாக கூறினார்.தனது அப்பாவுக்கு பிறகு தனது அண்ணன்தான் அப்பா இல்லாத குறை தெரியாமல் வளர்த்ததாக கூறினார்.
இதனைல் தனது இரண்டாவது ஹீரோ தன்னுடைய அண்ணன்தான் என்று கூறி கண்ணீர் விட்டார். இந்நிலையில் அக்ஷராவின் ஃபேமிலி போட்டோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் அக்ஷரா-வா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.