கதறிக் கதறித் துடிக்கும் புனித் ராஜ்குமார் மனைவி… கண்ணீராய் ஊற்றெடுக்கும் அஸ்வினியின் காதல்..!

கன்னட பவர்ஸ்டார் 46 வயதான நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, நேற்றைய தினம் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள விக்ரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

 

அங்கு சுய நினைவற்ற நிலையில் இருந்த அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. ஆனாலும் அவருக்கு நினைவு திரும்பவில்லை. இதையடுத்து நேற்று மதியம் 2.30 மணிக்கு அவர் காலமானார். இதை அறிந்த ரசிகர்கள், தென்னிந்திய நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இவரது உடல் கன்டீர்வா ஸ்டுடியோவில் தந்தை ராஜ்குமார் சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. வெளிநாட்டில் உள்ள இவரது மகள் வந்தவுடன் இறுதி சடங்குகள் தொடங்கும். புனித்தின் ஆசைபடி அவரது கண்களை அவரது குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர். 

 

புனித்தின் இறப்பு குறித்து அறிந்த ரசிகர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றனர்.இனி ரசிக்க அஸ்வினியிடம் எஞ்சி இருப்பது புனித்தின் நினைவுகள் மட்டுமே. அதனை நினைத்து புனித்தில் உடலருகே நின்றுகொண்டு கதறிக் கதறி அழுது கொண்டிருக்கிறார் அவரது மனைவி அஸ்வினி.

 

புனித் ராஜ்குமார் யாரும் எதிர்பாராத வகையில் இந்த மண்ணுலகைவிட்டு சென்று விட்டார். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பின்னணிப் பாடகர், டான்ஸர் என்பதையும் தாண்டி அவர் ஒரு அன்பான மனிதர். அதைவிட சிறந்த கணவர். அஸ்வினி, புனித் பெரும்பாலான பெண் சக நடிகர்களுடன் நெருக்கமாக இருப்பதாக வரும் வதந்திகளை நம்ப மாட்டார். 

 

அவர் அத்தகைய படப்பிடிப்புகளில் என்ன நடக்கும் என்பதை எளிதாக உணர்கிறார். அமைதியான ஆதரவை வழங்குவதைத் தவிர, அஸ்வினி புனித் படங்களின் உருவாக்கத்தில் மூக்கை நுழைக்க மாட்டார். இருப்பினும், அவர் பெரும்பாலும் புனித்தின் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். ராஜ்குமார் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டதில் அஸ்வினிக்கு எப்போதும் பெருமிதம். 

 

 

தான் அதிகம் திரைப்படப் பிரியர் அல்ல என்றும், புனித் நடித்த சில படங்களை மட்டுமே பார்த்திருக்கிறேன் என்றும் அவர் அவ்வப்போது கூறுவார். ஆனால் ராஜ் தி ஷோமேன் படத்தில் புனித் நடித்ததைக் கண்டு பரவசமடைந்து, புனித் உண்மையிலேயே பிரகாசமான நடிகர் என வெளிப்படையாக பாராட்டினார். 

 

ஆனால் அப்படி இனி ரசிக்க அஸ்வினியிடம் எஞ்சி இருப்பது புனித்தின் நினைவுகள் மட்டுமே. அதனை நினைத்து புனித்தில் உடலருகே நின்றுகொண்டு கதறிக் கதறி அழுது கொண்டிருக்கிறார் அஸ்வினி. அவரது கண்ணீரை காலம்தான் தீர்த்து வைக்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *