விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியலில் மூலம் அறிமுகமானவர் ஜெரி. இவர் முதன் முறையாக தமிழில் ஹீரோவாக அறிமுகமான படம் ‘காதல் சொல்ல வந்தேன். இந்தப் படத்தில் தான் நாயகியாக அறிமுகமானார் தெலுங்கு நடிகை மேக்னா ராஜ்.
அதனை தொடர்ந்து கவிஞர் சினேகன் ஹீரோவாக நடித்த “உயர் திரு மற்றும் ‘420’ என்ற ‘நந்தா உட்பட ஒரு சில படங்களில் நடித்தார் மேக்னா ராஜ். அதன் பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆகையால் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வந்தார்.
பின்னர் நடிகை மேக்னா ராஜ், தான் காதலித்து வந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை 2017ல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின் மூன்று மலையாள படங்களிலம், மூன்று கன்னட படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பின் அவரது உடல் எடை அதிகரித்திருந்தது.
நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த போது இவரது கணவரின் மறைவு சினிமா ரசிகர்களை மிகவும் அதிர்சிக்குள்ளாக்கியது. இதனால், நொடிந்துதான் போனார் மேக்னா ராஜ். தற்போது, இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மெல்ல மெல்ல அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரும் மேக்னா ராஜ் தற்போது இயல்பாக இணையத்தில் உலவ ஆரம்பித்துள்ளது ரசிகர்ளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
சமீப காலமாக தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் பதின்ம வயதில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
கன்னடத்தில் வெளியான “புண்டா” என்ற படத்தில் நீச்சல் உடையில் நடித்திருந்தார் அம்மணி என்பது குறிப்பிடத்தக்கது.