இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடித்த ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. அதன்பின் நரகாசுரன், காட்டேரி, கண்ணை நம்பாதே உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
இதில் எந்த படங்களும் தற்போது அதுவரை வெளியாகவில்லை. நரகாசுரன் திரைப்படம் மட்டும் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. 4 படத்தில் மட்டுமே நடித்த ஆத்மிகாவுக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எனவே, கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷுட் செய்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். இதையடுத்து விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது.
இப்படம் கடந்த 17ம் தேதி தியேட்டரில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெட்டிசன்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், குட்டைப்பாவடை அணிந்து கொண்டு கேமராவை தரையில் வைத்து போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள், கேமரா இன்னும் கொஞ்சம் கீழ போயிருந்தா.. மொத்த மானமும் போயிருக்குமே.. என்று கலாய்த்து வருகின்றனர்.