இப்போது யோசிக்கையில் இந்தப் படங்களில் ஒரு ஒற்றுமை தெரிகிறது. ஆரம்பகால படங்களில் அவர் எளிய வெகுளிப் பெண்ணாகவே சித்தரிக்கப்பட்டிருந்தார். அவரது குழந்தமை நிரம்பிய முகம் அதற்கு மிகவும் அணுக்கமாக இருந்தது.
2005ல் தமிழில் அறிமுகமான போது வெள்ளந்தி சாயம் வெளுக்கத் தொடங்கியது. முதல் படம் ஹரியின் ஐயா. தார் சாலை, ஆற்றங்கரை என அத்திரி புத்திரி கத்திரிக்கா.. என்று குட்டை ஸ்கூல் யூனிஃபார்மில் தொடையழகு தெரிய நயன்தாரா ஆடினார்.
அதுவரை கெண்டைக்காலுக்கு மேல் அவரது உடை உயர்ந்ததில்லை. டும்டும் பிப்பீ டும்டும் பிப்பீ எப்போ எப்போ என்று கேட்டுக்கொண்டே என்று இடையை ஆட்டிய போதுதான் ரசிகன் முதன் முதலில் நயன்தாராவை தொப்புளை தரிசித்தான்.
அப்போது கவர்ச்சி ஏணியில் ஏறியவர் இதுவரை இறங்கவேயில்லை.மேலே மேலே சென்று உச்ச நட்சத்திரம், லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களுக்கு கவர்ச்சி சேவை செய்து வருகிறார்.
விரல் நடிகரை காதலித்த போதும், டான்ஸ் மாஸ்டரின் காதலில் விழுந்த போதும் நயன்தாராதான் தலைப்பு செய்தி. அதிலும் மாஸ்டரின் காதல் விஷயத்தில் மீடியாக்கள் அவரை பிழிந்து எடுத்தன.
திருமணமான ஒருவரை எப்படி காதலிக்கலாம், ரமலத் என்ற அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கலாமா? மகளிர் அமைப்புகள் பிளிறிக் கொண்டு இறங்கியதைப் பார்த்தால் நயன்தாராவை சட்னி ஆக்கிவிட்டுதான் அடங்குவார்கள் போலிருந்தது.
நயன்தாராவை இப்போது வெள்ளந்தியான பெண் என்று சொன்னால் சிரிப்பார்கள். அவர் கடந்து வந்த பாதை காரியவாதி என்ற பிம்பத்தை அவருக்கு அளித்திருக்கிறது. தற்போது, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர் எங்கு சென்றாலும் அவருடனேயே செல்கிறார்.
சமீபத்தில், குட்டியான ஸ்கர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடையழகும் தெரிய எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.