விமான நிலையத்தில் அரைகுறை ஆடையில் நயன்தாரா.. ஆனால்,… – ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

 

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று புனேயில் தொடங்கியுள்ளது. பட அறிவிப்பை டீசருடன் அட்லி வெளியிட உள்ளார் என்று சொல்லப்பட்ட நிலையில், எந்த அறிவிப்பும் இன்றி நேரடியாக படப்பிடிப்பு தொடங்கியுள்ளனர். 

 

விஜய்யை வைத்து கடைசியாக பிகில் படத்தை இயக்கிய அட்லி, அடுத்து ஷாருக்கானுக்கு கதை சொன்னார். கதை அவருக்குப் பிடித்துப்போக ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தொடங்கின. படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

 

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால், படம் குறித்து யாரிடமிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. அட்லி பட அறிவிப்பை டீசருடன் வெளியிட உள்ளதாக மும்பையிலிருந்து வந்த செய்திகள் கூறின. ஆனால், அதற்கு மாறாக இன்று புனேயில் நேரடியாக படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் அட்லி. 

 

இந்தப் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டார். படப்பிடிப்புதளத்தில் நடிகை ப்ரியாமணியும் காணப்பட்டதால், அவரும் இந்தப் படத்தில் நடிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. 

 

ஜி.கே.விஷ்ணு படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு ஜவான் என்ற பெயரை தயாரிப்பு தரப்பு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில், படப்பிடிப்பில் கலந்து கொள்ள புனே சென்றுள்ள நயன்தாரா பேண்ட் அணியாமல் அரைகுறை ஆடையில்சென்றுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள், என்ன ஒரு ஆச்சரியம்.. விக்னேஷ் சிவன் இல்லாமல் தனியா இருக்காங்க.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *