விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சென்னையை சேர்ந்த இவர் ஒரு டான்ஸர். கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர்.
முதன்முதலில் சன்டிவியின் பிரபல 90’s ஃபேவரைட் சீரியலான தென்றலில் நிலா என்ற கேரக்டரில் நடித்தார். தொடர்ந்து சரவணன் மீனாட்சி, பொன்னூஞ்சல், சோலார் டிவியின் தாமரை சீரியல், மெல்ல திறந்தது கதவு, பிரியசகி, அழகி, களத்து வீடு, மோகினி, அரண்மனை கிளி போன்ற பல சீரியல்களில் நடித்தார்.
தற்போது சித்தி2 தொடரிலும் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் தனது லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் காயத்ரி.
பொன்னூஞ்சல், சோலார் டிவியின் தாமரை சீரியல், மெல்ல திறந்தது கதவு, பிரியசகி, அழகி, களத்து வீடு, மோகினி போன்று பல சீரியல்களில் வரிசையாக நடித்து வந்தார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு அரண்மனை கிளி சீரியலில் ரேணுகா என்ற ரோலில் வில்லியாக நடித்தார்.
பாசிட்டிவ் கேரக்டரை விட நெகட்டிவ் கேரக்டர்தான் இவருக்கு அதிகமாக கிடைக்கிறதாம். நடிப்பை தாண்டி இவர் Mr and Mrs கில்லாடி, ஜோடி நம்பர் 1 சீசன் 9 போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டுள்ளார். இவர் டான்ஸர் யுவராஜ் என்பரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.இந்நிலையில், விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் அம்மணி.
அந்த வகையில், தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னா கும்மு.. அக்மார்க் நாட்டுக்கட்ட என்று எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.