சினிமா நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் இருப்பதை போல சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். அப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள லிஸ்டில் முக்கியமானவர் ரட்சிதா மகாலட்சுமி.
விஜய் டிவியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர்.இந்த சீரியல் இல்லத்தரசிகளுக்கும், காதலர்களுக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது. தற்போது தன் கணவருடன் இணைந்து நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சீரியலில் கணவனும் மனைவியும் இருவரும் இணைந்து நடிப்பதால் திருமணமான அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரட்சிதா.
இந்த ஊரடங்கு சமயத்தில் ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் எந்நேரமும் சமூகவலைத்தளங்களில் இருப்பதுடன் எப்போதும் தனது க்யூட்டான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.
இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.
சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
இதுதவிர உப்புக்கருவாடு என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.