திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நமீதா ஆவார். இவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி,ஆங்கிலம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பொதுவாக கவர்ச்சி நடிகையாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
தற்பொழுது இவர் ஏராளமான படங்களில் நடித்து திரையுலகில் கலக்கி வருகிறார். அந்தவகையில் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு 2014ஆம் ஆண்டில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து ஏய், சாணக்கியா, பம்பரக் கண்ணாலே, ஆணை உட்பட இன்னும் பல படங்களில் நடித்து திரையுலகின் ஒரு அங்கமாக திகழ்கிறார்.
இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பம்பரக்கண்ணாலே திரைப்படம் தான் இவருக்கு மிகப் பெரிய பிரபலத்தை தந்தது இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது தன்மூலம் நடிகை நமிதாவிற்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகாத காரணத்தினால் இவருடைய மார்க்கெட் குறைந்து வந்தது.
அந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 1இல் கலந்து கொண்டதன் மூலம் மீண்டும் பிரபலமடைந்தார். இந்த நிலையில் வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, நடிப்பு மட்டுமில்லாமல் அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.
பிரபல தேசிய கட்சி ஒன்றில் இணைந்துள்ள நமீதா அடிக்கடி அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இது ஒருபக்கம் இருக்க, நடிகர்கள் மஹத் மற்றும் பிரேம்ஜி போட்டுக்கொண்ட ட்விட்டர் சண்டையில், பார்ட்டி முடிந்த பின் நடிகரும், இயக்குனர் VP-யின் தம்பியுமான பிரேம்ஜி நமிதாவின் தோள் மீது படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட மஹத் “மத்த போட்டோஸ் எல்லாம் உன்னோட வாட்ஸ் ஆப்-க்கு அனுப்புறேன்” என்று மிரட்டியுள்ளார்.