தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம் வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.
மும்பையில் பிறந்து வளர்ந்த மலையாள பெண் மீரா வாசுதேவன். “கோல்மால்” என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் தமிழில் நடித்த “உன்னை சரணடைந்தேன்” திரைப்படம் வெற்றி பெற்றது.
அதன் பின்னர் மீரா வாசுதேவன் நடித்த ‘அறிவுமணி’, ‘ஜெர்ரி’, ‘கத்தி கப்பல்’ உள்ளிட்ட படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
அதன் பின்னர் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மூத்த மகன் விஷால் அகர்வாலை திருமணம் செய்து கொண்ட மீரா, அவரிடம் இருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றார்.
அதன் பிறகு, சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்த அனிஷ் ஜான் கோகன் என்பவரை கல்யாணம் செய்து கொண்டு, சில மாதங்களில் அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றார். தற்போது மும்பையில் மகளுடன் வசித்து வருகிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “அடங்கமறு” படத்தில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதையடுத்து வெயிட்டான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தீவிரமாக வாய்ப்பு தேடிவருகிறார். இந்நிலையில், இரவு நேரத்தில் வெறும் ப்ராவுடன் படுக்கையில் படுத்துக்கொண்டு செல்ஃபி ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காக செய்துள்ளார் அம்மணி.