Tuesday, September 24

“52 வயசுலயும் இப்படியா..? – நம்பவே முடியலையே…” – இளம் நடிகைகளுக்கு சவால் விடும் சுகன்யா..!

 

“கருத்த மச்சான்… கஞ்சத் தனம் எதுக்கு வெச்சான்… என, கருப்பு காளைகளை, கலர் கனவு காண வைத்த கனவுக்கன்னி. 

 

“சின்ன ராசாவே… சித்தெறும்பு என்னை கடிக்குது.. உன்னை சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது.., என, ஆட்டம் போட்டு, பிறரை தன் வசம் மொய்க்க வைத்தவர். 

 

“செந்தமிழ் நாட்டு தமிழச்சியே… என, கிழிந்த ஆடையில் ஆடி, இளைஞர் மனதில் புத்தாடை சூடிய புதுமலர். இதற்கு மேல் சுகமான வரிகள் தேவையில்லை, அவர் “சுகன்யா என்பதை தெரிவிக்க. 

 

நடிகை சுகன்யா என்றாலே அந்த காலகட்டத்தில் ஒரு கவர்ச்சி இருக்கும்.சினிமாவுக்கு பின் அவர் சின்னத்தையிலும் வெற்றிகரமாக தனது கால் தடத்தை பதிய ஆரம்பித்தார். 

 

சினிமாவில் பல விதமாக சாதித்த நடிகை சுகன்யா தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நிலைதடுமாறிவிட்டார். நடிகை சுகன்யா கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்தார். 

 

 

இருப்பினும், அடுத்த ஒரு வருடத்தில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டு தனியே வாழ்ந்து வருகின்றார். இரண்டாவது திருமணம் அவர் செய்து கொள்ளவில்லை. 

 

தற்போது, சுகன்யாவுக்கு 52 வயதை எட்டியுள்ள நிலையில், சுகன்யாவின் திருமண வாழ்க்கை எதற்காக பிரிந்தது என்பது குறித்து தகவல் தற்போது கிடைத்துள்ளது. சீரியலிலும் சினிமாவிலும் அவர் இரவு பகல் பாராமல் நடித்து வந்துள்ளார். 

 

 

இந்த நிலையில், தற்போது சுகன்யா குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. சுகன்யாவுக்கு முன்னாள் அமைச்சர் ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும், இதனால்தான் கணவருக்கும் சுகன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருக்கலாம் என்றும், விவாகரத்திற்கு பின், அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், 52 வயசுலயும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *