“பொட்டு வச்சா நல்லா இருக்கும்…” என கூறிய ரசிகரின் காதில் ரத்தம் வரும் அளவுக்கு ஒரு பதிலை கூறிய அனிதா சம்பத்..!

 

தமிழ் சின்னத்திரையில் சன் நெட்ஒர்க்கில் செய்தி வாசிப்பாளராக வலம் வருபவர் அனிதா சம்பத். இவருக்கு சமீபத்தில் அவருடைய காதலருடன் திடீர் திருமணம் நடைப்பெற்றது. 

 

திருமணத்திற்கு பிறகு மீண்டும் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கியுள்ளார். இது குறித்து இவர் பதிவிட்ட புகைப்படத்தில் கழுத்தில் தாலி இல்லாததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து தாலி எங்கே என கேள்வி கேட்க தொடங்கினர். 

 

அதற்கு அனிதா என் செய்தியை பார்ப்பவர்கள் எல்லா மதத்தையும் பார்ப்பவர்கள், ஆகையால் நான் மதத்தை அடையாளப்படுத்தி கொள்ள விரும்பவில்லை எனவும் தாலியை கழட்ட மாட்டேன், மறைத்து கொள்வேன் எனவும் கூறியுள்ளார். 

 

மேலும் அப்படியே தாலியை களட்டினாலும் தவறில்லை, அது அவரவர் விருப்பம் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

குங்குமம் வைப்பது ஒரு மதத்தின் அடையாளம்.. சரிதான். ஆனால், நெற்றியில் குங்குமம் வைக்காமல் இருப்பது இன்னொரு மதத்தின் அடையாளமாக இருக்கிறதே.. அதற்கு என்ன பதில் சொல்லப்போறாங்க இந்த தீர்கதரிஷி என்று கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *