“கண்ணு கூசுதே…” – கவர்ச்சி உடையில் தெறிக்கவிடும் ராஷி கண்ணா..! – திணறும் இன்டர்நெட்..!

 

தமிழில் 2018ல் வெளிவந்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராஷி கண்ணா. 

 

அதன்பின் ‘அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ‘அரண்மனை 3, துக்ளக் தர்பார்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். 

 

தற்போது, கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’, படத்திலும், சித்தார்த் நடிக்கும் ‘சைத்தான் கா பச்சா’ படத்திலும், மேலும் இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். டில்லியைச் சேர்ந்த ராஷி கண்ணா 2013ம் ஆண்டு வெளிவந்த ‘மெட்ராஸ் கபே’ என்ற ஹிந்திப் படத்தில்தான் முதன் முதலில் அறிமுகமானார். 

 

பின் தெலுங்கில் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹிந்தியில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

தற்போது ராஷி கண்ணாவின் சம்பளம் ஒரு கோடி ரூபாயாம். இதன் மூலம் 1 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறும் ஹீரோயின்களின் கிளப்பில் இணைந்துள்ளார் ராஷி கண்ணா. 

 

தமிழில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் தான் ஒரு கோடிக்கும் அதிகமாக தற்போது சம்பளம் பெறும் நடிகைகள். 

 

இந்நிலையில், காவி நிற உடையில் கண் கூசும் அளவுக்கு கவர்ச்சி காட்டி இணையத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *