இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும் உணவுகள்.

மனிதனின் ரத்த ஓட்டம் சீராக இருந்தால் எவ்விதமான வியாதிகளும் எளிதில்  தாக்காது .அப்படிப்பட்ட ரத்த ஓட்டத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளில் பிரதானமாக எது உள்ளது என்பதை இந்த கட்டுரையின் மூலம் நீங்கள் எளிதில் அறிந்துகொள்ளலாம். 

உணவுகளில் பழங்கள் தான் ரத்த ஓட்டத்தை  அதிகரிக்க வைக்கக் கூடிய தன்மை உள்ளது. குறிப்பாக ஆப்பிள், பேரிச்சை, அத்தி, பப்பாளி, தக்காளி  பழங்களை  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மிக எளிதில் அதிகமாக ஏற்படும்.

அதுமட்டுமல்லாமல் இரும்புச்சத்துள்ள உணவுகள், சுண்ணாம்புச் சத்துள்ள உணவுகள்,  கனிமங்கள் குறிப்பாக துத்தநாகம், பொட்டாசியம், குரோமியம் போன்ற தாதுக்கள் அதிகம் இருக்கக்கூடிய உணவுப்பொருட்களை தொடர்ந்து சாப்பிடுவதால்  பிணிகள் குறைந்து ரத்த விருத்தி ஆவதுடன் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

தேனில் ஊறவைத்த கடுக்காய், தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிடும் போது ரத்த ஓட்ட அளவு அதிகரிக்கும். எந்த ஒரு மனிதனுக்கு ரத்தம் அதிக அளவு உள்ளதோ அவர்களுக்கு ரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு அவர்களின் மூளை சிந்தனைத் திறன், நினைவாற்றல் அதிகமாக இருக்கும். ரத்த ஓட்டம் குறைவாக உள்ள போது நினைவாற்றல் அடிக்கடி குறைவாக இருக்கும்.

 இதை தான் மறதி நினைவுக்கு வரவில்லை என்று கூறுகிறோம். இதனை கண்டிப்பாக நிவர்த்தி செய்ய வேண்டுமென்றால் ரத்தம் தலைப் பகுதிக்கு செல்ல வேண்டும் அவ்வாறு செல்வதற்கு நாம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது கட்டாயமாக்க வேண்டும். பித்தம் தலைக்கு ஏறி விட்டது என்றால் என்ன அர்த்தம் ரத்தத்தில் உள்ள சத்துக்கள் குறையும் போதுதான் பித்தம் அதிகமாகி கல்லீரல் சோர்வடையும். கல்லீரல் சோர்வு அதிகம் ஆனால் எதிர்மறை எண்ணங்கள், நினைவாற்றல் குறைந்து போவத, கழுத்து சார்ந்த வாத நோய்களும் உண்டாகும்.

இவற்றை குறைக்க வேண்டுமென்றால்  கீரைகளில் முருங்கைக்கீரை, பருப்பு கீரை, மணத்தக்காளிக் கீரை, பாலக்கீரை போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் ரத்தத்தின் அளவும், ரத்த ஓட்டமும் அதிகமாகும். உணவில் சின்ன வெங்காயம், பூண்டு இவற்றை தினமும் சேர்ப்பதன் மூலமும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

இந்த ரத்த ஓட்டம் அதிகரிக்கும் உணவுகளை நீங்கள் அதிகமாக சேர்க்கும் போது உங்கள் நினைவாற்றல் மேம்படும் மறவாமல் உங்கள் உணவில் அன்றாடம் இஞ்சி, நெல்லிக்காயை சேர்த்துக் கொள்வதை வழக்கமாக கொண்டால் நீங்கள் மறதிக்கு பை,பை சொல்லி விடலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …