“நீரின் குழந்தை..” – நீச்சல் உடையில் குளு குளுவென நிற்கும் “காலா” பட நடிகை..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை ஹுமா குரேஷி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2018-ம் ஆண்டு காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர் ஆவார்.இவர் 2012-ம் ஆண்டு கேங்ஸ் ஆஃப் வசுசேய்புர என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். 

 

பின்னர் பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் ஹுமா குரேஷி. அந்த படத்தில் அவர் ரஜினியின் இளம் வயது காதலியாக நடித்திருந்தார். 

 

அந்த படத்தில் அவரது நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் பிறகு தற்போது அஜித்தின் வலிமை படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஹுமா குரோஷி.தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

 

என்னுடைய பயமே இது தான்

அதில் அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் அதிகம் இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் ஹீமா குரேஷி தன்னுடைய ஒர்க் அவுட் செல்பி ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த பதிவில் தனக்கு இருக்கும் ஒரு பயம் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார் அவர். 

 

“என்னுடைய மிகப்பெரிய பயம் தோல்வி அடைவது பற்றி இல்லை, இழப்பது பற்றியும் இல்லை, அதிகம் உழைத்தும் வெற்றி கிடைக்காமல் போவது பற்றியும் இல்லை. என்னுடைய பயம் சாதாரண ஒருவராக இறப்பது பற்றியது தான். அதனால் போராடு என் தோழா. அந்த கதவை விடாமல் தட்டு திறக்கப்படும் வரை அல்லது உங்கள் வலிமை அதை உடைத்தெறியும் வரை” என ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார். 

 

 

தன்னுடைய ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த வரிகளை அவரே சொந்தமாக எழுதி பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு ஆதரவு

 

சமீபத்தில் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பட வாய்ப்புக்காக அதற்கு அழைக்கிறார் என்று புகார் கூறிய நடிகை பாயல்கோஷ், தன்னை போல் பல நடிகைகளுக்கு அனுராக் , அந்த மாதிரி தொல்லை கொடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டி இருந்தார். 

 

இந்த நிலையில், நடிகைகளிடம் அனுராக் தவறுதலாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் புகாரை ஹுமா குரேஷி மறுத்தார். ஹுமா குரேஷி, இயக்குநர் அனுராக்கின் ‘’ GANGS OF WASSEYPURY ’ படத்தின் மூலம் தான் இந்தியில் அறிமுகம் ஆனார். 

 

 

ஹுமா விடுத்துள்ள அறிக்கையில் ‘’ அனுராக் நடிகைகளிடம் தவறுதலாக நடந்து கொள்பவர் இல்லை. நான் அறிந்த வரை வேறு யாரிடமும் அனுராக் தவறுதலாக நடந்ததில்லை. சமூக வலைத்தளங்களில் சண்டை போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்று கூறியிருந்தார்.

கொளுத்தும் வெயிலில்.. நீச்சல் உடையில்..

 

தற்போது கொளுத்தி எடுத்து வரும் கோடைவெயிலை சமாளிக்க நீச்சல் உடையில் நீச்சல் குளத்திற்குள் பாய்ந்து விட்டார் அம்மணி. நான் நீரின் குழந்தை, என்னை எந்த வெயிலும் ஒன்றும் செய்து விட முடியாதுஎன்று கூறி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ஆமா..ஆமா.. நீங்க நிஜமாவே நீரின் குழந்தை தான் என்றும் அதனால் தான் வாட்டர் பெட் போல கொளுக்கு மொழுக்கு என இருக்கிறீர்கள் போல என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *