காவலன் படித்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த நடிகையும், துணை நடன இயக்குநருமான நீபா தந்தையின் உயிரை காப்பாற்ற காசு இல்லாததால்தான் சின்னத்திரையில் கவர்ச்சியாக நடித்தேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
காவலன் படித்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த நடிகையும், துணை நடன இயக்குநருமான நீபா தந்தையின் உயிரை காப்பாற்ற காசு இல்லாததால்தான் சின்னத்திரையில் கவர்ச்சியாக நடித்தேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் சினிமாவில் கவர்ச்சியை ரசிப்பவர்கள் சின்னத்திரையில் நடித்தால் கால்கேர்ள் என அசிங்கமாக பேசிவிட்டு செல்கின்றனர். யார் கூட வேண்டுமானாலும் நடிப்பேன்.
நடிப்பு எனத தொழில் என கூறியுள்ள நீபா, கவர்ச்சியாக நடிப்பவர்களை தவறாக எண்ணவேண்டாம், எந்த மனநெருக்கடியில் நடித்திருப்பார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும் என பேசினார்.
முன்பெல்லாம் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கென்றே ஒரு நடிகை இருப்பார். ஆனால் இப்போதெல்லாம் கதாநாயகிகளே கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டனர். என்னை போன்ற சாதாரணமானவர்கள் நடித்தால் தவறாக பேசுவது என்ன நியாயம்? நீங்கள் நடிகைகள் குறித்து பதிவிடும் கமெண்ட்டுகள் அவர்கள் மட்டும் படிப்பதில்லை.
அவர்கள் குடும்பமே படிக்கிறது. அவர்களுக்கு தேவையற்ற மனஉளைச்சலை தராதீர்கள். 3 படங்களில் நான் கவர்ச்சியாக நடித்த காரணம் என் தந்தை மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை அளிக்க காசு இல்லை. அதனால்தான் வேறு வழியின்றி நடித்தேன்.
மற்றபடி எனக்கு அதில் விருப்பம் இல்லை. நடிகை மும்தாஜ் அவர்கள் படத்தில் கவர்ச்சியாக நடித்திருப்பார்கள், ஆனால் அவரின் உண்மை முகம் யாருக்கும் தெரியாது.
எனவே ஒருவரை பற்றி தெரியாமல் அவதூறு பதிவிடவேண்டாம் என குறிப்பிட்டுள்ள நீபா, விரைவில் நடனப் பள்ளி துவங்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் எம்.ஜி ஹெக்டர் கார்வாங்கியதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
புதிய கார் வாங்கிய அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறினார்கள். இந்நிலையில், மொளச்சு மூணு இலைய விட பாடலுக்கு மொட்டை மாடியில் அழகாக நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள்,இதனை உங்க புருஷன் அதாவது பாரதி கண்ணம்மா பாரதி பாத்தா என்ன ஆகும் என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.