தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை பூர்ணா, முன்னணி நடிகர்களோடு நடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். நடிகை பூர்ணா சமீபத்தில் தன்னுடைய சினிமா பயணம் பற்றி கூறியுள்ளார்.
அதில், பெண்கள் தியாகத்தின் மறு உருவம். எல்லா துறையிலும் பெண்கள் முன்னேறுகிறார்கள். அவர்களுக்கு ஆண்களுக்கு சமமாக அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும்.
பெண்களுக்கு சிறுவயது முதலே பெற்றோர் அறிவுரைகளை சொல்லி வளர்க்கிறார்கள். கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். சில எல்லைகளை வைக்கிறார்கள். கட்டுப்பாடோடு இருக்கவேண்டும் என்பதை ஆண்களுக்கும் சொல்லி தர வேண்டும்.
சினிமா துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. பெண் இயக்குனர்கள் இன்னும் அதிகமாக வந்தால் மேலும் பலன் கிடைக்கும். ஆனால் சினிமாவில் 80 சதவீதம் ஹீரோக்களின் ஆதிக்கம்தான் உள்ளது.
சமீபகாலமாகதான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வருகின்றன. 15 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கிறேன். முன்னணி நடிகர்களோடு நடிக்கவில்லை. ஆனால் பூர்ணா என்றால் பலமான கதாபாத்திரங்களுக்கு ஏற்றவர் என்ற பெயர் எனக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவது போன்ற கவுன் உடையில் இருக்கும் தனது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், ஜவுளி கடை பொம்மை மாதிரி இருக்கீங்க.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. என்று அம்மணியின் அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகிறார்கள்.