பில்லி, சூனியம் நீக்கும் வாராகி.

 இன்று எண்ணற்ற வீடுகளில் எந்த காரணத்தினால் சண்டை ஏற்படுகிறது என்று தெரியாமல் தொட்ட அனைத்துக்குமே மிகப்பெரிய அளவில் சண்டைகளும், மன உளைச்சல்களும் ஏற்பட்டு வருவது சகஜமான ஒன்றாகிவிட்டது.

 இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்க்கும் போது அவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் வீட்டுக்குள் உள்ள கண் திருஷ்டி மற்றும் பில்லி சூனிய ஏவல் களை கூறமுடியும் இதற்குக் காரணம் அந்த குடும்பத்தை எப்படியும் அழித்துவிடவேண்டும் என்று அவர்களுக்கே தெரியாத எதிரிகளால் செய்யப்படக்கூடிய வேலைகள் தான் இவை.

சூழ்நிலையை தகர்த்தெறிய கூடிய சக்தியை அளிக்கக் கூடிய அமைப்பு கொண்ட தெய்வம்தான் வாராகி.

சூனியத்தை தீர்த்து வீட்டைக் காக்கும் வாராகி:

சப்த கன்னிகளில் தலையானவள் இந்த வாராகி. மகாகாளி, தாருகாசுரனோடு போர்  புரிந்தபோது அவளுக்குத் துணையாக நின்றவள்.

லலிதையின் ரத, கஜ,  துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி எனும் பொறுப்பில் தண்டினீ  என   போற்றப்படுகிறாள்.

 பஞ்சமி திதியன்று இந்த வாராகி தேவியை வழிபட்டால்  என்னை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் அனைத்து வித கெட்ட எண்ணங்கள் நம்மை விட்டு ஓடிவிடும்.

நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வாசனை மலர்கள் சாற்றி வாசனை தூபங்கள் ஏற்றி  வராகி தேவியின் காயத்திரி மந்திரத்தை பஞ்சமி திதி பிரம்ம முகூர்த்தத்தில் ஆரம்பித்து தொடர்ந்து ஜபித்து வர வேண்டும்.

 அப்படி ஜெபித்து வருவதன் மூலம் ஏவப்பட்ட பில்லி சூனியம் அனைத்தும் செயலிழந்து போகும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும் சுப நிகழ்வுகள் நடக்கும்.

மந்திரம்

ஓம் ஸ்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி

தன்னோ வாராகி ப்ரசோதயாத்.

என்ற இந்த மந்திரத்தை துன்பம் வரும் போது மட்டுமல்ல எப்போதும் ஜபித்துக் கொண்டிருந்தால் தேவியின் பரிபூரண அருள் திட்டுவது ஒரு ஏவல் பில்லி சூனியம் எதுவும் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் தாக்காமல் தட்டு நிற்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

எனவே தினமும் வீட்டில் இருக்கக்கூடிய பெண்களோ ஆண்களோ யாராவது ஒருவர் இந்த மந்திரத்தை தினமும் 9 முறை ஜெபித்து வந்தால்  அன்னையின் அருள் கிடைப்பதோடு எதிரிகள் பொடிப்பொடியாக போகும் மூலை தெரியாது என கூறும் அளவுக்கு வாராகியின் சக்தி அபரிமிதமானது ஆகும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …