“திருமணம் ஆனாலும்.. இந்த நேரத்தில் உடலுறவு வச்சிக்கணும்..” – நடிகை அர்ச்சனா ஒரே போடு..!

பிரபல நடிகை அர்ச்சனா சீரியல் சினிமா இரண்டு தளங்களிலும் நடித்து வருகிறார். கணவரை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் அர்ச்சனா.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அர்ச்சனாவிடம் முன்பெல்லாம் காதலித்து பிரிந்தவர்கள் இருந்தார்கள். ஆனால், தற்போது உடலுறவு கொண்ட பிறகும் பிரிந்து செல்பவர்கள் இருக்கிறார்கள் இதனை நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை அர்ச்சனா, இந்தக் காலத்து இளைஞர்களிடம் இருக்கக்கூடிய விஷயத்தை கேட்கிறீர்கள். எனக்கு இதைப் பற்றி என்ன சொல்வதென தெரியவில்லை. அந்த காலத்தில் எல்லாம் காதலனை ஒரு நிமிடம் நேரில் பார்க்க மாட்டோமா..? நேரடியாக சந்திக்க மாட்டோமா..? ஒரே ஒரு முறை கட்டிப்பிடிக்க மாட்டோமா..? ஒரே ஒரு முத்தம் கிடைக்காதா என்றெல்லாம் ஏங்கி இருப்போம்.

ஆனால் தற்பொழுது அப்படி கிடையாது. தொலைபேசியில் வந்த பிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. நேரடியாக அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். உடலுறவு கூட கொள்கிறார்கள். எதற்கு இந்த அவசரம் என தெரியவில்லை.

திருமணத்திற்கு முன்பே இதெல்லாம் அவர்கள் செய்து விடுவதால் திருமணதிற்கு பிறகு என்ன பெரிதாக இருந்து விடப்போகிறது என நீ அந்த விஷயத்தில் சரியில்லை.. எனக்கு இது சரியில்லை.. உனக்கு அது சரியில்லை.. ஏதாவது ஒரு காரணங்களை கூறி பிரிந்து சென்று விடுகிறார்கள்.

காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணுடன் உடலுறவு செய்தாகிவிட்டது. எனவே, இந்த காதலை பிரிந்து விட்டார் வேறு ஒரு பெண்ணுடன் அதை செய்யலாம் என்ற ஒரு நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது தேவையில்லாத விஷயம். நம்முடைய கலாச்சாரத்திற்கும்.. இதற்கும் ஒத்து வராது.

எனவே திருமணம் செய்து கொண்டாலும் கூட குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இருவரும் சிறப்பான எதிர்காலத்தை நடத்த முடியும் என்ற ஒரு நம்பிக்கை வரும் பொழுது உடலுறவு கொள்வது தான் சரியாக இருக்கும்.

திருமணம் செய்து விட்டோம்.. குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவசர அவசரமாக உடலுறவு ஈடுபட்டு குழந்தை பெற்றுக் கொண்டு அதன் பிறகு எந்த ஒரு ஈர்ப்பும் இல்லாமல் அந்த விஷயம்.. இந்த விஷயம்.. ஏதாவது கூறி சண்டை போட்டுக் கொண்டு.. இதெல்லாம் தேவையில்லாத வேலை.

அதே சமயம் திருமணம் செய்து கொள்வது உறவு கொள்வதற்கு தான் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். இருவருக்குமே தேவை என்னும் பட்சத்தில் இருவருக்குமே அது பிடித்திருக்கிறது என்ற பட்சத்தில் நிச்சயமாக உடலுறவு கொள்ளலாம் என்று கூறியுள்ளார் அர்ச்சனா.

அவர் கூறியதில் இருந்து புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னவென்றால் யாராவது ஒருவர் தயங்குகிறார்.. என்றால் ஒருவர் காத்திருப்பதில் தவறில்லை. இருந்தாலும், வருடக்கணக்கில் உடலுறவை தவிர்ப்பதும் மிகவும் தவறானது. அதே போல, உடலுறவில் ஈடுபட தயாராகி விட்டால் தங்களுடைய எதிர்பார்ப்புகளை உடனே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பது தவறானது.

கணவனுக்கு மனைவியிடம் அந்த விஷயத்தை ஆயிரம் எதிர்பார்ப்புகள் இருக்கும். அதே போல, மனைவிக்கு கணவனிடம் அந்த விஷயத்தை ஆயிரம் எதிர்பார்ப்புகள் இருக்கும். இந்த எதிர்பார்ப்புகள் ஒரே இரவில் செய்து விட வேண்டும் என்பது சரியாகாது.

உடலுறவு என்பது பத்து நிமிட சமாச்சாரம் தான். ஆனால், தாம்பத்யம் என்பது நீண்ட கால பயணம். இதனை பலரும் உணருவதில்லை. அல்லது அவர்களுக்கு தெரிவதில்லை. இருவருமே எண்ணங்கள் தங்களின் எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் ஒருவரோடு ஒருவர் கலந்து பேசி இருவருக்கும் அதை செய்வதில் தயக்கம் இல்லை எனும் போது அதனை கொண்டாடலாம்.

ஆனால், யாராவது ஒருவருக்கு குறிப்பிட்ட எதிர்பார்ப்பு பிடிக்கவில்லை.. முகம் சுழிக்கும் விதமாக இருக்கிறது என்றால் அதனை புரிந்து கொண்டு அதனை செய்யாமல் விடுவது தான் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் செய்யக்கூடிய உச்சபட்ச மரியாதை.

எனவே, எதிர்பார்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றிக் கொள்ளலாம் ஒரே இரவில் அனைத்தையும் செய்ய வேண்டும் ஒரே இரவில் அனைத்து எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து விட வேண்டும் என்றால் அடுத்து என்ன..? என்ற கேள்வி எழும்.

தாம்பத்ய மகிழ்ச்சி வாழ்க்கை முழுதும் நீடிக்க வேண்டுமென்றால் எதிர்பார்ப்புகளை மனதில் வைத்துக்கொண்டு அவற்றை மெதுமெதுவாக ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும்.. ஒரே இரவில் அல்லது ஒரே வாரத்தில் தீர்த்து விட்டார் கணவன் மீது மனைவிக்கு.. மனைவி மீது கணவனுக்கு இருக்கக்கூடிய அந்த எதிர்பார்ப்பு இருப்பதெல்லாம் இல்லாமல் போவதற்கான வழியை கூட ஏற்படுத்திக் கொடுத்து விடும் என்பதை உணர வேண்டும்.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *