நமது முன்னோர்கள் அதிக அளவு காய்கறிகளுக்கு பதிலாக கீரைகளை தங்களது உணவில் சேர்த்துக் கொண்டார்கள். பொதுவாக குப்பை மேடுகளில் காணப்படும் குப்பைக்கீரை முதல் கண்ணுக்கு வெளிச்சம் தரக்கூடிய பொன்னாங்கண்ணிக்கீரை வரை அவர்கள் உணவில் தினமும் சேர்த்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கீரைகளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டதால் அவர்கள் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருந்திருக்கிறது என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.
கீரைகளும், பயன்களும்
அகத்திக்கீரை
அகத்திக்கீரையை 15 நாட்களுக்கு ஒரு முறை உண்ணவேண்டும். இது ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்க கூடிய குணமுடையது.
காசினிக்கீரை
இந்த காசினிக்கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்க கூடிய ஆற்றல் உள்ளது. சிறுநீரக சம்பந்தமான அனைத்து வியாதிகளையும் தீர்க்கக்கூடிய சக்தி இந்தக் கீரைக்கு உள்ளது.
சிறு பசலைக் கீரை
இது சரும நோய்களைத் தீர்க்கும். பால்வினை நோய்களை குணமாக்கக் கூடிய ஆற்றல் இந்த சிறு பசலைக் கீரைக்கு உண்டு.
பசலைக்கீரை
இக்கீரை தசைகளை பலமடையச் செய்யும். உடலில் அதிக நீர் அதாவது துர்நீரை வெளியேற்றும் கூடிய ஆற்றல் மிக்கது.
கொடிப்பசலைக் கீரை
இது பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதலை நீக்கக் கூடிய சக்தி உள்ளது. நீர்க்கடுப்பை சரிசெய்யும்.
மஞ்சள் கரிசலை
கல்லீரலை பலமாக்கி காமாலையை குணமாக்கும்.
குப்பை கீரை
பசியைத் தூண்டும். வீக்கத்தை வத்தவைக்கும் எல்லாவிதமான சத்துக்களையும் கொடுக்கும்.
அரைக்கீரை
ஆண்மையை பெருக்கும். எல்லா வயதுமக்களும் விரும்பக்கூடிய ஒரு கீரை தான் இந்த அரைக்கீரை.
புளியங்கீரை
ரத்தச் சோகையை நீக்கும். கண் நோய்களை சரியாக்கும். கண் எரிச்சல் இல்லாமல் கண்களை பாதுகாக்கும்.
பிண்ணாருக்குகீரை
வெட்டையை நீர் கடுப்பை குணமாகும்.
பரட்டைக்கீரை
பித்தம் கபம் போன்ற நோய்களை விலக்கும்.
பொன்னாங்கண்ணி கீரை
உடல் அழகையும் கண் ஒளியையும் அதிகரிக்கக் கூடிய ஆற்றல் உள்ளது.
சுக்கா கீரை
ரத்த அழுத்தத்தை சீர்செய்யும் .சிரங்கு மூலத்தை போக்கும்.
வெள்ளை கரிசலாங்கீரை
இரத்தசோகையை சரிசெய்யும்.
முருங்கைக் கீரை
நீரிழிவை நீக்கும் இரும்புச்சத்தை அதிக அளவு கொடுக்கும் கண்கள் உடல் பலம் பெற உகந்த கீரை.