படுக்கையில் மல்லாக்க படுத்தால் அதுக்கு ஈஸியா இருக்கும்.. பீதியை கிளப்பிவிட்ட நயன்தாரா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. பல்வேறு காதல் தோல்விகளுக்கு பிறகு சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனே திருமணம் செய்து கொண்ட இவர் வாடகை தாய் மூலமாக உலக் மற்றும் உயிர் என இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு தொழிலில் கவனம் செலுத்தி வரும் இவர் சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால், திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான பாலிவுட் திரைப்படமான ஜவான் திரைப்படம் தவிர வேறு எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை.

அதிலும், சமீபத்தில் வெளியான அன்னபூரணி திரைப்படம் ரசிகர் மத்தியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பிட்ட ஒரு மதத்தவரை வேண்டுமென்றே குறை சொல்ல வேண்டும் அவர்களை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இப்படியான கதைகள் எடுக்கப்படுகிறது என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தனர் ரசிகர்கள்.

இது நயன்தாராவுக்கு தெரிந்து நடந்திருக்கலாம் அல்லது தெரியாமல் நடந்திருக்கலாம். இதற்கு நயன்தாரா பொறுப்பாக்க முடியாது. ஆனால், படத்தின் இயக்குனருக்கு இது கண்டிப்பாக தெரிந்திருக்கும் .ப

டம் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒரு மதத்தை இழிவாகவோ அல்லது அந்த மாதிரி இருக்கக்கூடிய ஏதாவது ஒரு சடங்கை இழிவாகவோ காட்சிப்படுத்துவது என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது என்று கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த படத்தின் பதிப்பை வெளியிட்டிருந்த நெட்ஃபிக்ஸ் நிறுவனம் தங்களுடைய தளத்திலிருந்து அன்னபூரணி படத்தை நீக்கிவிட்டது.

இது ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து தன்னுடைய தொழில்களும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை நயன்தாரா. பெண்களுக்கான அழகு சாதனம் பொருட்கள் மற்றும் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் இவர் சமீபத்திய பேட்டி கொண்டு கலந்து கொண்டார்.

அதில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நயன்தாராவிடம் ஒரு கேள்வி எழுப்பினார். பொதுவாக அனைவருக்குமே பேய் மீது ஒரு பயம் இருக்கும். இருட்டாக இருந்தால் பேய் வந்துவிடும்.. தலையணை அருகில் செருப்பையோ அல்லது துடைப்பத்தையோ வைத்துக்கொண்டு படுத்தால் பேய்கள் நம்மை எதுவும் செய்யாது என்று நம்பிக்கை எல்லாம் இருக்கும்.

அப்படி ஏதாவது உங்களுக்கு அப்படி உங்களுக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பினார் தொகுப்பாளனி திவ்யதர்ஷினி. இதற்கு பதில் அளித்த நடிகை நயன்தாரா மல்லாக்கக படுத்தபடி உறங்கினால் பேய் நம்மளை தாக்குவதற்கு ஈஸியா இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதை நான் நம்பினேனா.. நம்பவில்லையா.. என்று தெரியவில்லை. ஆனால், நான் உறங்கும் பொழுது நேராக படுத்து உறங்க மாட்டேன். ஒருக்களித்து படுப்பதுதான் என்னுடைய பழக்கம்.

அதேபோல இருட்டாக இருந்தால் பேய் வந்து விடும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதனால் விளக்கை அணைத்து விட்டு தூங்கும் பழக்கம் என்னிடம் கிடையாது என கூறியிருக்கிறார் நயன்தாரா.

இதை கேட்டு திகில் அடைந்த திவ்யதர்ஷினி இனிமேல் நான் எப்படி நேராக படுப்பது. எப்போதுமே நான் விளக்கை அனைத்து விட்டு தான் படுப்பேன். நீங்கள் சொன்னதை கேட்டுவிட்டு நானும் இனிமேல் விளக்கை அனைத்து தூங்க மாட்டேன் என்று பதறி இருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *