ட்ரெஸ் கழட்டும் போது.. அதை பண்ண.. கீழ நாலு பேர் இருப்பாங்க.. இரவின் நிழல் நடிகை சினேகா குமார்..!

2022-ஆம் ஆண்டு பார்த்திபன் தயாரிப்பில் வெளி வந்த இரவின் நிழல் படம் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஏ.ஆர் ரகுமானின் இசையில் உருவான இந்த திரைப்படம் உலகிலேயே முதல் முதலாக நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக எடுக்கப்பட்டது.

இந்த பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குனர் பார்த்திபன் அவர்களே காரணம் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இதனை அடுத்து பலரது பாராட்டுக்கள் இவருக்கு கிடைத்தது.

இந்த படத்தை எடுப்பதற்காக 64 ஏக்கர் பரப்பளவில் நகரும் மற்றும் நகராத செட்டை உருவாக்கி இந்த படத்தை பிடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி சினேகா குமார் கூறியிருக்கும் விஷயங்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் உள்ளது.

இதற்குக் காரணம் இந்த படத்தில் நடிக்கும் போது காஸ்டியூன்களை மாற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனைகளை பற்றியும், யார் இருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் உடனுக்குடன் டிரஸ்சை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததையும் அவர் நேர்த்தியாக பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் டிரெஸ்ஸை கழற்றி ஓடும் போது அதை எடுப்பதற்காக கீழே நான்கு பேர் காத்திருப்பார்கள் என்ற தகவலை இரவின் நிழல் நடிகை சினேகா குமார் கூறியது ஒவ்வொரு நடிகைகளும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை யோசிக்க வைத்தது.

மேலும் யாராவது பார்ப்பாங்களா? என்று கூட யோசிக்க முடியாது. அந்த அளவு வேகமாக உடைகளை மாற்ற வேண்டி இருந்ததால் அதைப் பற்றி எல்லாம் யோசிக்க முடியாது. அந்த அளவு உடைகளை வேகமாக மாற்ற வேண்டும்.

நானாவது உள்ளே ஒரு வெள்ளை நிற ஆடையை உள்ளே போட்டு இருந்தேன். மற்றொரு நடிகை பிரியங்கா புடவையை கட்டி இருந்தால் அவர் முழுவதையும் மாற்றி தான் மற்ற உடையை மாற்ற வேண்டும் என்றால் ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

ஒவ்வொரு டேக்கின் போதும் ஒவ்வொரு விதமான ஆடையை நாங்கள் சரி செய்து அணிந்து வர வேண்டும். ஒவ்வொரு முறையும் ரன்னிங்கில் தான் ஆடையை நான் கழற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும் ஆடை மட்டுமல்ல அணிந்திருந்த அணிகலன்களையும் அப்படியே கழட்டி விட்டு தான் செல்வேன்.

மேலும் எங்களது மேல் தண்ணீர் தெளிப்பார்கள். ஏனென்றால் அந்தக் காட்சியை அப்படித்தான் எடுக்க வேண்டும். ஸ்கிரீனில் பார்க்கும் போது தான் அது எப்படி இருந்தது என்று எனக்கு தெரிய வந்தது.

பார்த்திபன் சார் என்ன சொல்கிறாரோ அதை ஃபாலோ செய்து தான் இந்த படத்தில் நடித்ததாக சினேகா குமார் கூறியிருக்கிறார். இதனை அடுத்து அவர் ரீடேக் போக வேண்டும் என்று சொன்னால் அதற்கும் தயாராக வேண்டும்.

நான் நடித்த சீனை நான் ரசிகர்களோடு ஒன்றாக தான் பார்த்ததாக தெரிவித்தது வியப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் தான் இந்த படம் வெளி வந்துள்ளது என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ளும்படி அவரது பேட்டி இருந்தது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *