எதுவா இருந்தாலும் நயன்தாரா இப்படித்தான்.. மேடையிலேயே கூறிய விக்னேஷ் சிவன்..!

நடிகை நயன்தாரா, முதலில் நடிகர் சிம்புவுடன் கிசுகிசுக்கப்பட்டார். பிறகு, நடிகர் பிரபுதேவாவை காதலிப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால், நானும் ரவுடிதான் படத்தில் நடித்த பிறகு, அந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிப்பது உறுதியானது.

ஏனெனில் பல இடங்களுக்கு, சினிமா விழாக்களில் இருவரும் ஒன்றாக வந்தனர். அருகருகே அமர்ந்துக்கொண்டனர். அவர்கள் காதலிக்கின்றனர் என்ற செய்திக்கு இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை.

இப்படி ஏழு ஆண்டுகள் காதலித்த நிலையில், இருவரும் கடந்தாண்டில் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணமான சில மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு இருவரும் பெற்றோர் ஆயினர்.

இதற்கிடையே சினிமா விழா ஒன்றில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். அப்போது விழா மேடையில் நின்ற அவர்களை பார்த்து நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி, கேள்வி கேட்கிறார்.

நயன்தாரா அணியும் புடவையில் உங்களுக்கு பிடித்த கலர் எது, அதாவது எந்த கலரில் நயன்தாரா புடவை அணிந்தால் உங்களுக்கு பிடிக்கும் என விக்னேஷ் சிவனிடம் கேட்கிறார். முன்னதாக, ஏவியில் ரசிகர்கள் சொன்ன பதில்களை காட்டுகின்றனர்.

அதில் ரசிகர்கள் பிளாக், ரெட், கிரீன், யெல்லோ என பல நிறங்களை கூறுகின்றனர். அதில் ஒரு ரசிகர், எந்த கலராக இருந்தாலும் அழகாக இருக்கும். ஆனால் எனக்கு கிரீன் பிடிக்கும் என்கிறார்.

பின் மேடையில் நின்ற விக்னேஷ்சிவன், அந்த கேள்விக்கு பதில் கூறுகையில், அதுதான், ஒருவர் சொன்னாரே. நயன்தாராவுக்கு எந்த கலர் போட்டாலும் அழகாதான் இருக்கும் என்று பதிலளித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

எதுவா இருந்தாலும், எந்த கலர் டிரஸ் போட்டாலும் நயன்தாரா அழகுதான் என்பதை மேடையில் பல பேர் முன்னிலையில் ஸ்டேட்மென்ட் ஆக தந்து அசத்தி விட்டார் விக்னேஷ்சிவன். அருகில் நின்றிருந்த நயன்தாரா முகம்தான் வெட்கத்தில் சிவந்து போனது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *