முதல் நான் பண்ணுவேன்.. அப்புறம் இந்த மூணு பேரு.. பிரபல இயக்குனரை அம்பலப்படுத்திய ஜீவிதா..!

அட்ஜஸ்ட்மென்ட் குறித்து தற்போது இணையங்களில் அதிக அளவு விஷயங்கள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக திரை துறையில் இது போன்ற சம்பவங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நிகழ்ந்த வருவதாக நடிகை ஜீவிதா தெரிவித்து இருக்க கூடிய கருத்து பலரையும் அவர் பக்கம் ஈர்த்துள்ளது.

படவாய்ப்புக்காக படுக்கை..

இந்த அட்ஜஸ்ட்மென்ட் அனைத்துமே பட வாய்ப்புக்காகவும் தொடர்ந்து அவர்களது படங்களில் நடிப்பதற்காகவும் திரை மறைவில் நடக்கக்கூடிய விஷயமாக இருந்தாலும் தற்போது ஊடகங்களில் பல திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் முதல் துணை நடிகைகள் வரை ஓப்பனாக பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் நாம் யாரையெல்லாம் மதிப்போடு வைத்திருந்தோமோ அந்தப் பிரபலங்கள் கூட இது போன்ற சில்லித்தனமான விஷயங்களில் தங்களை ஈடுபடுத்தி இருப்பதை அறிந்து முகம் சுளிக்க கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

 

இதை அடுத்து நடிகை ஜீவிதா வாழ்க்கையில் பல சோதனைகளையும், சிக்கல்களையும் கடந்து தான் நடிப்புத் துறைக்கு வந்திருக்கிறார். இவர் ஆபிஸ் சீரியலில் வில்லி சௌந்தர்யாவாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

இதை அடுத்து சன் டிவியின் திருமகள் மெகா தொடரில் வில்லி ஆனந்தவள்ளியாக நடித்து அனைவரையும் மகிழ்வித்தவர் இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடித்திருப்பார்.

வரிசையா மூணு பேரு..

இதனை அடுத்து பட வாய்ப்புக்காக இவரிடம் படுக்கையை பகிர்ந்து கொள்ள சொன்ன விஷயத்தை தற்போது வெளிப்படையாக பேசி இருக்கிறார். இதில் இவர் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் வரிசையாக மூன்று பேரை அட்ஜஸ்ட் செய்ய வேண்டுமாம்.

அவர்கள் வேறு யாருமில்லை இயக்குனர்கள், கேமராமேன்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள், மேனேஜர்கள் என இவர்களை எல்லாம் அட்ஜஸ்ட் செய்தால் கட்டாயம் அந்த படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் அடுத்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் தருவதாக கூறினார்களாம்.

மேலும் அந்த மூன்று பேரும் எப்போது வேண்டுமென்றாலும் ரூமுக்கு வந்து செல்வார்கள் அதற்கு உடன்படுவதாக இருந்தால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம். மேலும் உங்களுக்கு உரிய சம்பளம் நீங்கள் எதிர்பார்ப்பதை விட பல மடங்காக இருக்கும் என்று கூறிய விசயத்தை தற்போது மீடியாவில் உடைத்து விட்டார்.

 

இந்த விஷயத்தை யாரும் எவ்வளவு தெளிவாக கூறியிருக்க முடியாது. மேலும் தனக்கு நடந்த அவலத்தை மறைக்காமல் வெளியிட்டு இருக்கும் நடிகை ஜீவிதாவின் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்.

இந்த விஷயம் தான் தற்போது வைரலாக பரவி வருவதோடு குடும்பத்தை விட்டு முன்னேற வேண்டும் என்ற துடிப்போடு வெளி வரும் பெண்களுக்கு திரை துறையில் இவ்வளவு அவலங்கள் உள்ளது என்பதை தோல் உரித்து காட்டி இருக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் ஒவ்வொரு நடிகைகளும் இது போன்ற சங்கடங்களை அனுபவித்து தான் திரையில் தங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வருகிறார்களா? என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே என் இது போன்ற அவலங்களை தடுக்க சட்டங்களை இயற்றி எந்தத் துறையில் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் இருந்தாலும் அதை தடுக்கக்கூடிய வழியை சட்டபூர்வமாக ஏற்படுத்த வேண்டும் என்பதே பலரது வேண்டுகோளாக உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *