மனைவியை பிரிந்த பிரபல நடிகர் மீது அந்த மோகம்.. கூச்சமின்றி கோரிய ரேகா நாயர்..!

சின்னத்திரையில் பணியாற்ற ஆரம்பித்த இவர் இன்று வெள்ளி திரையில் பல ரசிகர்கள் விரும்பக்கூடிய நடிகையாக ரேகா நாயர் மாறி இருக்கிறார். எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய தன்மை கொண்ட இவரை பற்றி பலவிதமான சர்ச்சை கருத்துக்கள் அடிக்கடி இணையங்களில் வெளிவரும்.

ரேகா நாயர்..

அந்த வகையில் தற்போது இவர் பேசி இருக்கும் பேச்சானது ரசிகர்களின் மத்தியில் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரைப்படங்களில் போல்டான கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வரும் ரேகா நாயர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆண்டாள் அழகர் என்ற நாடகத்தின் மூலம் பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

அடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் பிரபல தமிழ் பட இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் நடித்து சர்ச்சை நாயகியாக மாறிவிட்டார்.

மேலும் இவர் வாழ்க்கை நாம் நினைப்பது போல ருசிகரமாக அமையவில்லை. பல்வேறு சிக்கல்களை சந்தித்து தான் இந்த அளவு வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்.

தற்போது கணவரை பிரிந்து வாழக்கூடிய இவர் தன் மனதில் பட்ட உண்மைகளை வெளிப்படையாக பேசுவதின் மூலம் பல விதமான சிக்கல்களை திரையுலக வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார்.

மனைவியை பிரிந்த நடிகர் மீது மோகம்..

அந்த வகையில் தற்போது இவர் பேசிய பேச்சு மூலம் அதிர்ச்சியை ரசிகர்கள் அனைவரும் அடைந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் மனைவியை பிரிந்த நடிகையின் மீது இவருக்கு பெரிய அளவில் காதல் இருந்ததாக கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அந்த நடிகர் ஒரு வேளை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக தனது காதலை ப்ரபோஸ் செய்து அவரை திருமணம் செய்து கொண்டிருப்பேன் என்று தைரியமாக கூறியிருக்கிறார்.

மேலும் அந்த நடிகரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அண்மையில் இவரை சூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தபோது உங்களை மிகவும் பிடிக்கும் சார் என்று கூறியிருந்ததாக தெரிவித்தார்.

மேலும் இந்த வார்த்தை பலரும் பல்வேறு வகையான காலகட்டங்களில் அவரிடம் தெரிவித்து இருப்பார்கள். எனவே நான் கூறிய வார்த்தை அவர் எப்படி எடுத்துக் கொண்டிருப்பார் என எனக்கு தெரியவில்லை என்பதை நிதானமாக ரேகா நாயக் கூறியிருந்தார்.

எனினும் காதலின் மதிப்பு பலருக்கும் தெரியாது. ஒருவருக்கு காதல் ஏற்படும் போது அதனுடைய பாதிப்பு அவர்களை எந்த அளவுக்கு கொண்டு போய் விட வேண்டுமோ? அந்த அளவிற்கு ஆளுமையை செலுத்தும் என பேசிய பேச்சானது தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் மனைவியை பிரிந்த பிரபல நடிகரின் மீது இப்படி ஒரு மோகமா, இதை கூச்சமின்றி கூறுவது முறையா? என்பது போன்ற பல்வேறு வகையான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இந்தக் கேள்விகளுக்கும் நடிகை ரேகா நாயர் மனம் திறந்து தக்க பதிலை தருவார். ஏனெனில் அவர் ஒரு போல்டான லேடி என்று பல ரசிகர்கள் அவரை உசுப்பேத்தி விடுகிறார்கள்.

இன்னும் கொஞ்சம் நாட்கள் பொருத்து இருந்தால் கட்டாயம் இதற்கான விடையை ரேகா நாயர் தருவார் என நம்பலாம். அது சரி அப்படி என்றால் அந்த பிரபல நடிகர் யார் உங்களுக்கு தெரியுமா? முடிந்தால் நீங்கள் கண்டுபிடிங்கள்.. ஆம் நீங்கள் நினைப்பது போல அது நடிகர் தனுஷ் தான் அந்த அளவு ரேகா நாயர் விரும்பும் நடிகர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *