சீனாவில் இருந்து வந்த இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பல பகுதிகளை ஆக்கிரமித்து தன் வேலையை மிகவும் அழகாக செய்து முடித்துவிட்டது. இதனை தடுப்பதற்காக தடுப்பூசிகள் வந்து ஊசிகளும் போட்டு விட்ட நிலையில் மீண்டும் மீண்டும் ஒரு மாறி வருகின்ற கொரோனாவால் அனைவருக்கும் பிரச்சனைதான் ஏற்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது அலை முடிந்தது விட்ட போதிலும் நான்காவது அலைக்கான சாத்தியம் உள்ளது போல் ஒரு நாளில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து ஆயிரம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1247 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நான்காவது அலை மீண்டும் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள்.
ஓமிக்கிரானை தொடர்ந்து பல வகைகளில் உருமாறி வரும் இந்த வைரத்தை தடுப்பதற்கு இதுவரை மூன்று தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனினும் இதன் உருமாற்றம் மாறி மாறி ஏற்படுவதால் அந்த தடுப்பூசிகள் புதிய வைரசின் தாக்குதலை தடுக்குமாறு என்பதில் சந்தேகம் உள்ளது.
எனினும் நமது பழக்க வழக்கங்களை நாம் பின்பற்றினால் நிச்சயமாக இந்த தாக்குதலில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம்.மிளகு, கிராம்பு போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வெளியே செல்லும்போது கிராமினை உங்கள் வாயில் போட்டு வரும் உமிழ் நீரை அப்படியே விழுங்கி வாருங்கள். நிச்சயம் இது நமக்கு தற்காப்பாக அமையும்.