தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவ்வும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் அதிக சர்ச்சைகளைச் சந்தித்த போட்டியாளர் என்றால் அது நடிகை பாவனி தான். முதலில் காயின் டாஸ்கின் போது தொடங்கிய சர்ச்சை, பின்னர் அபிநய் உடனான காதல், அமீர் உடனான முத்த சர்ச்சை என இறுதிவரை நீண்டுகொண்டே சென்றது.
இந்த சர்ச்சைகளையெல்லாம் கடந்து இறுதிப்போட்டி வரை முன்னேறிய பாவனி, மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தினார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முன்னரே சின்னத்திரை சீரியல்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் பாவனி ரெட்டி.
பாவனி ரெட்டி பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய வரலாற்றை கூறிய பின்பு, இதையடுத்து ரசிகர்கள் சிலர் பாவனிக்கு இரண்டாவது திருமணம் நடைப்பெற்றதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால் இது வெறும் வதந்தி என்றும், அவர் இரண்டாவதாக ரிலேஷன்ஷிப்பில் இருந்தது உண்மை தான், ஆனால் அது திருமணத்தில் கைகூடவில்லை என்றும் பாவனியின் சகோதரி விளக்கமளித்தார்.
சமீப காலமாக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.