சர்க்கரை நோய் நீங்க சென்று வணங்க வேண்டிய திருக்கோயில்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சென்று வணங்கவேண்டிய திருக்கோயில் அருள் மிகு வெண்ணி கரும்பேஸ்வரர் திருக்கோயில் ஆகும் . 

இந்த திருக்கோயில்  திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் தாலுக்காவில்  கோவில்வெண்ணி என்ற ஊரில் அமைந்துள்ளது . 

முற்காலத்தில் இந்த தலம் முழுவதும் கரும்பு காடுகளால் சூழப்பட்டிருந்தது . ஒரு முறை இரு முனிவர்கள் தல யாத்திரை மேற்கொண்ட போது இத்தலம் வந்தனர் . 

அப்பொழுது இந்த கரும்பு காட்டிற்குள் இறைவனின் திருமேனி கண்டு தொழுதனர் . அவர்களில் ஒருவர் இத்தலத்தின் தலவிருட்சம் கரும்பு என்றும் மற்றொருவர் வெண்ணி என்று அழைக்கப்படும் நந்தியாவர்த்தம் என்றும் வாதிட்டனர் . 

இறைவன் அசரீரியாக தோன்றி தனது பெயரில் கரும்பும் தலவிருட்சமாக வெண்ணியும் இருக்கட்டும் என்றருளினார் . அன்று முதல் இறைவன் கரும்பேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் . 

பிரார்த்தனை : 

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரையையும் ரவையையும் சம அளவில் கலந்து பிரகாரத்தை வலம்வந்து எறும்புக்கு உணவாக இடுகிறார்கள் . 

இதனால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுவதுமாக குணமடைகிறார்கள் என்பது காலம் காலமாக உள்ள இங்குள்ள ஐதீகமாகும் .

நேர்த்திக்கடன் :

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு சர்க்கரை பொங்கல் வைத்து படைத்து விநியோகம் செய்து வழிபாடு செய்கின்றனர் . 

இத்திருத்தலத்தின் பெருமை :

மிகவும் பழமையான இத்தலத்து இறைவனை 4 யுகங்களிலும் வழிபாடு செய்யப்பட்டுள்ளதாக தல வரலாறு கூறுகிறது . 

இங்கு வீற்றிருக்கும் இறைவனின் திருமேனி அதாவது பாணத்தில் கரும்பு கட்டுகளாக கட்டப்பட்டிருப்பது போன்ற காட்சியுடன் அருள்பாலிக்கிறார் . 

கரிகாற் சோழன் தனது 18 வது வயதில் இங்குள்ள பிடாரி அம்மனை வழிபட்டு சேர சோழ குறு நில மன்னர்களை எதிர்த்து போர் செய்து வெற்றி பெற்றான் . கரிகாற் சோழன் பெற்ற இந்த வெற்றியே மாபெரும் வெற்றி என்று இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது

இங்குள்ள பிடாரி அம்மனை வழிபடுவர்களுக்கு எதிரி பயம் இருக்காது என்பது ஐதீகம் .

தான் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதத்தில் கரிகாற் சோழனும் முசுகுந்த சக்கரவர்த்தியும் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளதாக தல வரலாறு கூறுகிறது . 

இத்திருக்கோயிலின் சிறப்பம்சம் :

பங்குனி மாதம் 2 3 4 தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது . 

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் . 

தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 165 வது தேவார தலமாகும் . 

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வெண்ணி கரும்பேஸ்வரரை வழிபட்டு குணமடையுங்கள் . 

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …