மக்களால் மிகவும் விரும்பி அருந்தும் பானமாக டீ அல்லது தேநீர் இருக்கிறது .இந்த தேனீரில் க்ரீன் டீ,பிளாக் டீ போன்ற பல வகைகள் உள்ளது.
இதில் பிளாக் டீயை தொடர்ந்து பருகி வருபவர்களுக்கு நிறைய நன்மை கிடைக்கும். ரசாயனங்கள் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தால் ஏற்படும் நிறம் மாறுதல் மற்றும் தோல் புற்றுநோய் போன்றவற்றை தடுப்பதில் மிக சிறப்பாக செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.
அது மட்டுமல்ல உடல் பருமனை குறைக்கவும், தொப்பை அதிகமாக இருப்பதை குறைக்க இந்த டீயை குடித்தாலே போதும் என்று கூறுகிறார்கள்.
இந்த ப்ளாக் டீயை நீங்கள் தொடர்ந்து குடிப்பதால் தலை முடி ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும்.
ரத்தத்தில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகளவு இருப்பது அவசியம். பிளாக் டீ அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உற்பத்தி அதிகரிக்கும்.
மேலும் தலைமுடி உதிர்வைத் தடுக்கிறது. கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில் இளம் சூடான பதத்தில் பிளாக் டீ அருந்தி வந்தால் கடுமையான வயிற்று போக்கு ஏற்படுவது தடைபடும்.
வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயத்தில் உடல் இழந்த சக்தியை மீண்டும் பெற இந்த பிளாக் டீ உதவுகிறது.
ப்ளாக் டீ மூளையை புத்துணர்ச்சி பெற செய்து உடலும் மனமும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.
பார்வை, கேட்கும் திறன், கவனிக்கும் திறன் போன்றவற்றை மிகுந்த விழிப்புடன் செயல்பட வைப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சிறந்த பானம் தான் இந்த பிளாக் டீ.
கடுமையான மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினமும் காலை, மாலை இரண்டு வேளை தொடர்ந்து அருந்தி வந்தால் தினமும் மலம் கழிக்கும் நிலை உண்டாகி மலச்சிக்கல் தீரும்.
நீரழிவு நோயாளிகள் ப்ளாக் டீயை அதிகம் அருந்தி வந்தால் சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் இருக்கும். ப்ளாக் டீ உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புக்களையும் உடலின் ரத்தத்தில் அதிகம் படிய விடாமலும் தடுக்கும் ஆற்றல் உள்ளது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது.
எனவே உடல் எடையை குறைப்பவர்கள், தொப்பையை குறைக்க விரும்புபவர்களும் இனி ப்ளாக் டீயை தொடர்ந்து குடித்து வந்தால் அழகான உடல் வாக்கை பெற