முதல் நாள் ஷூட்டிங்கில் நடந்த கொடுமை.. சிங்கப்பெண்ணே சீரியல் சவுந்தர்யா ஓப்பன் டாக்..!

சன் டிவியில் தற்போது டிஆர்பி ரேட்டில் முதல் இடத்தில் இருக்கும் சீரியல் ஆன சிங்கம் பெண்ணே சீரியல் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இந்த சீரியலில் நடித்து வரும் சவுந்தர்யாவின் ஓப்பன் டாக் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிராமத்தில் இருந்து குடும்ப சூழ்நிலை காரணமாக நகரத்திற்கு தன் பெற்றோர்களை விட்டு வந்து குடும்ப கடனை அடைக்க கார்மெண்ட்ஸ் ஒன்றில் பணி புரிந்து வரும் பெண்ணை இருவர் காதலிப்பது போல கதை நகர்ந்து வருகிறது.

சிங்க பெண்ணே சீரியல் சவுந்தர்யா..

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் கதாநாயகிக்கு தோழியாக நடித்து வரும் சவுந்தர்யா தான் இந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடிக்கும் போது முதல் நாள் ஷூட்டிங்கில் நடந்த அனுபவங்களை அண்மை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வகையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் முதல் நாள் இவர்களுக்கு டயலாக் ஏதும் கொடுக்கவில்லை என்று வருத்தப்பட்டதாக கூறிய இவர் ஷூட்டிங் இடைவேளையின் போது அவர்களது நண்பர்களோடு வீடியோ சேட் செய்து மகிழ்ந்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஷூட்டிங்குக்கு வரச் சொல்ல கூறிய அவர்கள் நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றவுடன் எனக்கு என்ன வேடம், நான் என்ன பேச வேண்டும் என்பதை பற்றி எதுவும் கூறவில்லை.

அத்துடன் எனக்கு அருகில் இருந்த அனைவருக்குமே அதை சொல்லிவிட்டார்கள். இது எனக்கு சற்று பயத்தை ஏற்படுத்தியது.

முதல் நாள் சூட்டிங் இல் நடந்த கொடுமை..

இவர் நம்ம வீடு என்ற ஒரு குரூப்பை வைத்திருப்பதால் அந்த நான்கு நண்பர்களுக்கும் ஷேர் செய்து பேசிய போது தனக்கு இன்னும் எந்த ஒரு டயலாக்கையும் தரவில்லை என்று கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து தன்னை ஓர் ஜூனியர் ஆர்டிஸ்டாக நினைத்திருப்பார்களோ என்று யோசித்த நான் தவறுதலாக இந்த ஷூட்டிங்குக்கு வந்து விட்டோமோ என்று நினைத்திருந்தேன்.

அது மட்டுமல்லாமல் சற்று கலக்கத்தோடு இருந்த நான் அங்கு இருக்கும் யாருமே எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் என்பதால் கூடுதல் பயத்தோடு இருந்தேன்.

சௌ சௌவின் ஓப்பன் டாக்..

மேலும் அங்கு இருந்த அனைவருமே ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நல்ல திறமை வாய்ந்த அனுபவ சாலியாக இருந்ததால் எனக்கு மீண்டும் பயம் ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் சீரியல்களில் நடிப்பது எனது முதல் அனுபவமாக இந்த சிங்க பெண்ணே சீரியல் இருந்தது.

இதனை அடுத்து குளோசப் ஷாட் எடுக்கக்கூடிய சமயத்தில் என்னுடைய பெயரை என்னுடைய கேரக்டருக்கு அமைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது என கூறி இருக்கிறார்.

மேலும் சிங்க பெண்ணே சீரியலில் அடிக்கடி மறதி ஏற்படக்கூடிய பெண்ணாக ஹீரோயினியின் தோழியாக தனது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் இவரை அனைவரும் சௌசௌ என்று தற்போது அழைத்து வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இந்த சீரியலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை சௌந்தர்யாவுக்கு வளமான எதிர்காலம் உள்ளது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது என சொல்லலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …