கவர்ச்சி நடிகைக்கு வீடு.. தண்ணி போடும் பழக்கம்.. கவுண்டமணியின் ரகசிய பக்கத்தை உடைத்த நடிகர்..!

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு முத்திரையை பதித்த காமெடி நடிகரான கவுண்டமணி பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டியது இல்லை. இவர் குண்டக்க மண்டக்க பேசக்கூடிய டயலாக்குகள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆனது.

தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்புத்தூரில் மாவட்டத்தில் வல்லகுண்டபுரம் பகுதியில் பிறந்தவர். இவர் பெரும்பாலான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர் செந்திலோடு இணைந்து நடித்திருக்கிறார்.

நடிகர் கவுண்டமணி..

சினிமாவில் முட்டி மோதி முன்னுக்கு வந்த கவுண்டமணி பல இன்னல்களை பட்ட பிறகு தான் திரை உலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

ஆரம்ப காலங்களில் நடிகர் கவுண்டமணி திரைப்படங்களில் நடிக்கும் போது தனித்து நடித்து வந்தார். இதன் பின் செந்திலோடு இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்த பின்னர் இருவரும் மாபெரும் வெற்றியை பெற்றார்கள்.

இவர்கள் இருவரும் பேசக்கூடிய பேச்சு உரையாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனது. அதில் குறிப்பாக கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழம் வாங்குதல் சீன் பற்றி சொல்லவே வேண்டாம்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத அந்த காட்சியை இன்று உள்ள இளைய தலைமுறைகளும் ரசித்துப் பார்ப்பார்கள். வயிறு குலுங்க சிரிக்க வைக்க கூடிய இந்த சீனை பார்த்தால் கட்டாயம் நோய் நம்மை விட்டு ஓடும் என சொல்லலாம்.

அது போலவே சூரியன் திரைப்படத்தில் இடம் பிடித்த அரசியல் நாளே இதெல்லாம் சகஜமப்பா என்ற சொல்லாடல் இன்று வரை பிரபலமாக உள்ளது என்றால் பாருங்கள். இது வரை ஏறத்தாழ 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இருக்கக்கூடிய கவுண்டமணி 10 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கவர்ச்சி நடிகைக்கு வீடு..

நடிகர் கவுண்டமணி பற்றி சில விஷயங்களை தற்போது பிரபல நடிகர் மற்றும் திரைப்பட விமர்சகர் ஆன பயில்வான் ரங்கநாதன் அண்மையில் வீடியோ ஒன்றில் பேசி விவகாரமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

அந்த வகையில் நடிகர் கவுண்டமணிக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும் மேலும் பாடி டிமாண்ட் இருந்ததாகவும் சொல்லி அதிர்ச்சியை கிளப்பிய இவர் கவுண்டமணி மிகச் சிறப்பாக உண்ணக் கூடியவர் என்ற கருத்தையும் சொல்லி இருக்கிறார்.

இவர் காமெடி நடிகைகளாக இருந்த ஷர்மிலி, கோவை சரளா, வாசுகி போன்ற நடிகைகளோடு தொடர்பில் இருந்ததோடு மட்டுமல்லாமல் இன்னும் பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்தார்.

மேலும் ஷர்மிலிக்கு ஒரு பிளாட்டை ரங்கநாதபுரத்தில் வாங்கி கொடுத்தவர் கவுண்டமணி. அத்துடன் கவுண்டமணிக்கு வெண்ணிற தோல் இருக்கும் நடிகைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.

இவர் பலருக்கும் பணம் கொடுத்து உதவி செய்யக்கூடிய தன்மை கொண்டவர் என்றாலும் பணம் பெற்றவர் தவறாக நடந்து கொண்டால் அவரை விட்டு வைக்காமல் பல்வேறு வகையான கேள்விகளை கேட்டு திணறடிக்க கூடிய நபராக விளங்கினார் விளங்குவார்.

தண்ணி போடும் பழக்கம்..

மது அருந்தும் பழக்கம் இருக்கக்கூடிய இவர் சுந்தர்ராஜ், சத்யராஜ், மணிவண்ணன் போன்றவர்களோடு இணைந்து டிஸ்கஷன் சமயங்களில் அதிக அளவு மது குடிப்பார்கள் என்பதை ஓபன் ஆக பயில்வான் தெரிவித்திருக்கிறார்.

இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் நடிகர் கவுண்டமணிக்கு மது மற்றும் மாது பழக்கம் இருக்கிறதா? என்ற வகையில் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருவதோடு இந்த விஷயத்தை நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

நடிகர் கவுண்டமணி செந்திலுக்குப் பிறகு தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகர்களின் வரிசையில் ஓர் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் அவர்கள் இருவரும் படு ஹியூமராக பேசுவார்கள் என்பதையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …