சீனியர் ஹீரோயினுக்கு விடாமல் டார்ச்சர்.. ஆள் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த பிரபலம்..!

சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை என்பது அதிகமாகவே இருந்து வரும். ஏனெனில் அவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே நிறைய வாய்ப்புகள் கிடைத்துவிடாது. எனவே அதனை பயன்படுத்திக் கொள்ளும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவர்களிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டு அதன் மூலமாக வாய்ப்புகளை கொடுப்பார்கள்.

அதிலும் பெரிய ஹீரோக்களின் படம் என்றால் சொல்லவே வேண்டாம் தயாரிப்பாளர், இயக்குனர், நடிக்கும் கதாநாயகன் என்று அனைவரிடமும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் சீனியர் நடிகையிடமே அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பதற்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும்.

அதைதான் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் செய்திருக்கிறார். அதனை தொடர்ந்து தற்சமயம் கோடம்பாக்கத்தில் பேசப்படும் விஷயமாக இந்த விஷயம் மாறி இருக்கிறது.

கண் வைத்த தயாரிப்பாளர்:

சீனியர் நடிகையாக இருந்தாலுமே கூட சில வருடங்களாக அவருக்கு வாய்ப்புகள் என்பது குறைவாகவே வந்து கொண்டிருக்கின்றன. இதனால் பெரிதாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார் இந்த நடிகை.

திரும்பவும் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகலாம் என்று நினைத்திருக்கிறார் ஆனால் இவர் சினிமாவிற்கு வந்த காலம் முதலே இவர் மீது கண் வைத்து இருக்கிறார் இந்த தயாரிப்பாளர். இந்த நிலையில் இப்பொழுது வாய்ப்பை தவற விட்டு விடக்கூடாது என்று அந்த நடிகைக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

என்னதான் நடிகைகள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும் கூட தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் அல்லது நடிகர்தான் இறுதி கட்ட முடிவை எடுப்பார்கள். அதனால் அவர்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களுக்கு இணங்காமல் போகும் கதாநாயகிகளுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

வீட்டுக்கே வந்து டார்ச்சர்:

ஏற்கனவே இந்த நடிகை இந்த மாதிரியான அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லைகள் தாங்க முடியாமல்தான் சினிமாவில் இருந்து விலகி இருந்தார் என்று கூறப்படுகிறது. தற்போது ஒரு சில இயக்குனர்கள் இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அழைத்ததன் காரணமாகத்தான் திரும்ப சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் இந்த தயாரிப்பாளர் போன் மூலமும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகையின் வீட்டில் ஆள் இல்லை என்று அறிந்து கொண்டு அவரது வீட்டிற்கே வந்து விட்டாராம் இந்த தயாரிப்பாளர்.

நேரில் வந்தவர் நடிகைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருவதாகவும் தன்னுடைய அட்ஜஸ்ட்மெண்ட் விஷயத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால் முடியவில்லை என்று அந்த நடிகை மறுத்திருக்கிறார். மேலும் உன்னுடைய படத்தில் எந்த ஒரு வாய்ப்பும் தேவையில்லை என்று கூறி சத்தம் போட்டு அனுப்பி இருக்கிறார் கதாநாயகி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …