100000000000 ரூபாய் சொத்து.. தமிழ் சினிமாவில் பணக்கார குடும்பம் யாருன்னு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஹீரோ என்று அந்த காலத்திலேயே வலம் வந்தவர் தான் சிவக்குமார். இவர் கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளாக நீடிக்கும் நடிகராகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.

முதன் முதலில் 1965 இல் வெளிவந்த ‘காக்கும் கரங்கள்” என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி சினிமா துறையில் நுழைந்தார் சிவகுமார் .

நடிகர் சிவகுமார்:

இவரது இயற்பெயர் பழனிச்சாமி சிவக்குமார் என்பதுதான். பின்னாளில் இவர் சிவக்குமார் என மாற்றிக் கொண்டார்.

முதல் படத்தை தொடர்ந்து சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருமால் பெருமை, உயர்ந்த மனிதன், ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டி சக்கரம் ,சிந்து பைரவி, அவன் அவள் அது உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும், அக்னிசாட்சி உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அந்த காலத்தில் பிரபலமான நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார் நடிகர் சிவகுமார்.

இவர் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக நடித்து வருகிறார். அதாவது, எம்ஜிஆர் , சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், கமல்ஹாசன், அர்ஜுன் மற்றும் அஜித் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 10 ஆயிரம் கோடி சொத்து:

திரைப்படங்களை தாண்டி ராதிகாவுடன் இணைந்து சித்தி மற்றும் அண்ணாமலை போன்ற பிரபலமான தொலைக்காட்சி தொடர்களிலும் சிவக்குமார் நடித்திருக்கிறார்.

இதனிடையே சிவகுமார் நடித்து முடிப்பதற்குள் அவரது மகன்களான சூர்யா திரைப்படங்களின் நடிக்க ஆரம்பித்து நட்சத்திர அந்தஸ்தில் வந்துவிட்டார்.

பிறகு கார்த்தியும் அவரை தொடர்ந்து இன்று தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வந்துவிட்டார். இப்படி ஆன நேரத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பணக்கார குடும்பமாக திகழ்ந்து வருவது சிவகுமாரின் குடும்பம் தான் என்ற ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது .

இந்த தகவலை கேட்டு ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவே ஆச்சர்யத்தில் மூழ்கிவிட்டது. ஆம், கிட்டத்தட்ட 10,000 கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்களாம் சிவகுமார் வீட்டு குடும்பம் உறுப்பினர்கள்.

அந்த குடும்பத்தில் மூன்று ஹீரோஸ், ஒரு ஹீரோயின், ஒரு பாடகி என கோலிவுட் சினிமாவின் பணக்கார குடும்பமாக சிவக்குமார் குடும்பம் திகழ்ந்து வருகிறது.

4 தலைமறையாக சினிமாவில் சிவகுமார்:

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி ,கமல் போன்ற நடிகர்கள் ஒரு படத்திற்கு ரூ.150 கோடி சம்பளமாக வாங்குகிறார்கள்.

ஆனால், கோலிவுட் சினிமாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பமாக திகழ்ந்து வருவது சூர்யாவின் குடும்பம் தானாம்.

மற்ற நடிகர்கள் எல்லோரையும் மிஞ்சும் அளவுக்கு மிகச்சிறந்த குடும்பமாகவும் மிக பணக்கார குடும்பமாகவும் இருப்பது சிவக்குமார் குடும்பம் தானாம்.

அந்த காலத்தில் சிவகுமாரின் நட்சத்திர நடிகராக அதிக சம்பளம் வாங்கிய பணக்கார நடிகராக பார்க்கப் பட்டார் .

அவரது தலைமுறை முடிவதற்குள்ளேயே அவரது இரண்டு மகன்கள் ஆன சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் திரைப்படத்துறையில் ஹீரோவாக அறிமுகமாகி நட்சத்திர அந்தஸ்தை பிடித்து அதிக சம்பளம் வாங்குபவர்களாக பார்க்கப்பட்டு வந்தார்கள்.

அது தவிர அவர்களது வீட்டிற்கு மருமகளாக வந்த ஜோதிகாவும் நட்சத்திர நடிகை என்பதால் அவரும் கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் மருமகளாக பார்க்கப்பட்டார்.

அது மட்டுமில்லாமல் சிவகுமாரின் மகளான பிருந்தா பாடகியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து இவரும் கோடிக்கணக்கில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் படையாக திகழ்ந்து வருகிறார்.

கோடி கோடியாய் குவியும் பணம்:

இப்படியாக ஒரே குடும்பத்தில் ஐந்து பேரும் சினிமா துறையில் நுழைந்து கோடி கோடியாக பணத்தை சம்பாதித்து குவித்து வருகிறார்கள்.

இவர்களுடைய குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு என மதிப்பீட்டு பார்த்தால் கிட்டத்தட்ட 10,000 கோடிக்களை தாண்டும் என கூறப்படுகிறது.

இந்த தகவலை கேட்டு ஒட்டுமொத்த கோலிவுட் சினிமா ரசிகர்களும் அதிர்ந்து போய் விட்டார்கள். இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு மிகவும் சாதாரணமாக இருந்து வருகிறார் சிவக்குமார் என்பதுதான் பெரும் ஆச்சரிக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …