தவசி பட ஹீரோயின்.. Actress Pratyusha Case.. அப்படி ப்ரத்யுஷாவிற்கு அன்று நடந்தது என்ன ?

நடிகை ப்ரத்யுஷா (Actress Pratyusha) தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்த ஹீரோயினியாக திகழ்கிறார்.இவர் தெலுங்கானா மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். அங்கு இருக்கும் சந்தோஷ் வித்யா நிகேதன் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்ததோடு ஹைதராபாத்தில் உள்ள புனித ஆன்ஸ் பள்ளியில் உயர் கல்வியை படித்தார்.

இதனை அடுத்து இவர் ஜேபி உணவக மேலாண்மையில் நிறுவனத்தில் உணவக மேலாண்மையில் இளம் கலை பட்டம் பெற்றதை அடுத்து தொலைக்காட்சி நட்சத்திரம் 2000 என்ற போட்டியில் கலந்து கொண்டு மிஸ் லவ்லி ஸ்மைல் என்ற பட்டத்தை வென்றார்.

Actress Pratyusha Case.. 

தமிழ் திரை உலகில் இவர் நடிகர் முரளியுடன் இணைந்து மனுநீதி என்ற படத்தில் நடித்ததை அடுத்து இணைய திலகம் பிரபுவோடு சூப்பர் குடும்பம் என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்தார்.

அதுமட்டுமல்லாமல் கேப்டன் விஜயகாந்தின் தவசி படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் ரிலீசான இவர் 2004 – ஆம் ஆண்டு சத்தியராஜின் சவுண்ட் பார்ட்டி படத்தில் நடித்ததார். இந்த படம் தாமதமாக வெளி வந்தாலும் நல்ல விமர்சனங்களை இவருக்கு பெற்று தந்தது.

ஏற்கனவே திரை உலகில் இருக்கக் கூடிய நடிகைகள் பல அவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளால் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடிய சூழலை அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் 2002 ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராத சமயத்தில் நம்மை விட்டு சென்றார் நடிகை ப்ரத்யுஷா. இளம் வயதில் அவர் இந்த உலகை விட்டு சென்றது திரை உலகை இருப்போர் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தவசி பட ஹீரோயின்..

தவசி படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்ட தவசி பட ஹீரோயின் 2002 பிப்ரவரி 23/ஆம் தேதி தனது ஆண் நண்பர் சித்தார்த்தா ரெட்டையுடன் சேர்ந்து இந்த உலகை விட்டு செல்ல முயற்சி செய்தார்.

இதற்கு காரணம் இவர்களது திருமணத்தை இரண்டு குடும்பத்தாரும் எதிர்த்ததால் இந்த முடிவுக்கு சென்றதாக சொல்லப்பட்டு வரும் வேளையில் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று பலனில்லாமல் இறந்து போக இவரது காதலன் மட்டும் உயிர் பிழைத்தார்.

அப்படி ப்ரத்யுஷாவிற்கு அன்று நடந்தது என்ன ?

இதனை அடுத்து இந்த வழக்கானது பரவலாக விவாதிக்க பட்டதோடு மட்டுமல்லாமல் வெகு ஜனங்களின் மத்தியில் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் இருந்ததோடு இவரின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

புன்னகை மன்னன் படத்தில் தனது காதல் வாழ்க்கையை சோகத்தில் முடித்துக்கொண்ட நடிகையை போல குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

எனினும் பிரேத பரிசோதனையில் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சு திணறால் இறந்திருக்க கூடும் என்ற அறிக்கை தரப்பட்டதை அடுத்து இவரது காதலன் மேல் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனை அடுத்து இந்த நடிகையின் உடல் தடையவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் தடவியவியல் நிபுணரும் பேராசிரியுமான டிடி டோக்ரா தலைமையில் தடவியவியல் ஆய்வு செய்யப்பட அந்த அறிக்கையில் இவரது காதலன் தான் குற்றவாளி என குறிப்பிடப்பட்டதால் 2004 ஆம் ஆண்டு ஐந்தாண்டு சிறை தண்டனையை அவருக்கு நீதிமன்றம் விதித்தது.

இந்நிலையில் இவர் இறந்து 15 ஆண்டுகள் கழித்து இவரது தாயார் தனது மகள் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாகவும் கழுத்தில் நகக்கீறல்கள் இருப்பதால் கூட்டு பாலியல் வன்முறை செய்து கொண்டு இருக்கலாம் என ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததை அடுத்து பிரதியுஷா மரண விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் எந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …