அடேங்கப்பா 850 கோடியா..! பணம் இருந்தா Haldi.. இல்லன்னா நலங்கு..! காசு இருக்குன்னு இப்படியுமா..?

சமீபத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், நிக்கோலய் சச்தேவ் என்கிற நபருக்கும் இடையே திருமணம் நடந்தது. இந்த திருமணம்தான் கடந்த சில காலங்களாக பேசப்பட்டு வரும் விஷயங்களாக இருந்தன. வரலட்சுமி சரத்குமார் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார்.

வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று வந்த நடிகைகளில் வரலட்சுமி சரத்குமாரும் முக்கியமானவர். ஆரம்பத்தில் இவருக்கு சினிமாவின் மீது எந்த ஒரு ஆர்வமும் கிடையாது என்று கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் படிப்பின் மீது கவனம் செலுத்தி வந்த வரலட்சுமி தாமதமாகதான் சினிமாவின் மீது ஆர்வம் காட்டியிருக்கிறார். ஆனால் நடிகர் சரத்குமாருக்கு வரலட்சுமி சினிமாவிற்கு செல்வதில் விருப்பம் இருக்கவில்லை.

சினிமாவுக்கு வர அனுமதியில்லை:

ஏனெனில் நடிகைகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பது சரத்குமாருக்கு தெரிந்த விஷயம்தான் எனவே வரலட்சுமிக்கு வாழ்க்கை அப்படி அமைந்துவிட வேண்டாம் என்று நினைத்தார் சரத்குமார். ஆனால் விடாப்பிடியாக வரலட்சுமி திரைப்படத்தில் நடித்தே தீர வேண்டும் என்று கூறியதை அடுத்து அவரை நடிப்பதற்கு அனுமதித்தார் சரத்குமார்.

அப்படியாக வரலட்சுமி சரத்குமார் முதன்முதலாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே அதிக கவர்ச்சியுடன் நடித்திருந்தார் வரலட்சுமி சரத்குமார்.

இருந்தாலும் அந்த திரைப்படம் அப்போதைய காலகட்டத்தில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் தாமதமாக அந்த திரைப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்து வந்தார் வரலட்சுமி சரத்குமார்.

திரை வாழ்க்கையை மாற்றிய படம்:

இருந்தாலும் பாலா இயக்கத்தில் அவர் நடித்த தார தப்பட்டை திரைப்படம்தான் வரலட்சுமிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு அவரது தனிப்பட்ட நடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்க தொடங்கியது.

அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வில்லியாக நடிக்க தொடங்கினார் வரலட்சுமி சரத்குமார். இந்த நிலையில் 35 வயதை கடந்த பிறகும் கூட திருமணம் என்பதே செய்யாமல் இருந்தார் வரலட்சுமி சரத்குமார்.

ஒரு நடிகையானாலே பிறகு திருமணம் ஆவதில் தாமதம் ஏற்படும் என்பது சரத்குமாருக்கு தெரிந்த ஒன்றுதான். அதனால்தான் அவர் சினிமாவிற்கு செல்லக்கூடாது என்று அவர் நினைத்து வந்தார். இந்த நிலையில் எப்போது வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்து கொள்வார் என்பது சரத்குமாரின் கவலையாக இருந்து வந்தது. அதற்கு தகுந்தார் போல சமீபத்தில் நிக்கலோய் சச்தேவை காதலித்து வந்த வரலட்சுமி அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

திருமண விழா:

இவர்களது திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. தாய்லாந்தில் உள்ள பாலிதீவில் சொந்தங்கள் அனைத்தும் சூழ மிகவும் பிரம்மாண்டமாக இந்த திருமணம் நடந்தது. சரத்குமார் தன்னுடைய ஒரே மகளுக்காக அதிக செலவு செய்து இந்த திருமணத்தை நடத்தினார் என்பதுதான் அப்போதே பேச்சாக இருந்து வந்தது.

ஆனால் இது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறும் பொழுது அந்த மொத்த திருமணத்தையும் பத்திரிகை அடிப்பதில் துவங்கி திருமணம் நடந்து முடிந்து உணவு பரிமாறியது வரை அனைத்து செலவுகளையும் செய்ததை நிக்கலோதான்.

அவர் ஒரு மிகப்பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் 580 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் கொண்டவர் நிக்கோலே சச்தேவ். சொல்ல போனால் சரத்குமார் குடும்பத்தை விடவும் அவர் அதிகமான செல்வாக்கான குடும்பத்தை சேர்ந்தவர்.

அவர் மும்பையில் ஒருவரை ஒரு ஓவிய கண்காட்சி வைத்திருக்கிறார். அங்கு இருக்கும் ஓவியங்களில் இரண்டு விற்றாலே கூட கோடிக்கணக்கில் அதன் மூலமாக சம்பாதிக்க கூடியவர் நிக்கோலாய் சச்தேவ் என்று கூறுகிறார் பத்திரிகையாளர் செய்யாறு பாலு.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …