பகலில் ஒரு மாதிரி.. இரவில் வேறு மாதிரி.. ஹனிமூனில் கணவர் செய்த வேலை.. ஷாக் ஆன நடிகை..!

வீட்டில் குடும்பத்தார் அனுமதி இல்லாமலேயே மிகவும் போராடி தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று வந்தவர் இந்த நடிகை. கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக இருந்து வருகிறார்.

முதல் திரைப்படத்திலேயே முன்னணி நடிகரோடு ஜோடியாக நடித்து அறிமுகமானார் இந்த நடிகை. அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது.

ஆரம்பத்தில் கொஞ்சம் குறைவாக வாய்ப்புகள் கிடைத்தாலும் போக போக இவருக்கு நிறைய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் தமிழில் பிரபலமாக இருந்த நடிகர் ஒருவரோடு காதல் கிசுகிசுப்பில் சிக்கினார் இந்த நடிகை.

கிராண்டாக திருமணம்:

மேலும் இவர்களது காதல் வலுவாக இருக்கிறது என்று ஒரு பக்கம் பேச்சு இருந்தது. இவர்கள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்றும் சினி துறையில் பரவலாக பேச்சுக்கள் இருந்து வந்தது.

ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் இந்த நடிகையும் அந்த நடிகரும் பிறகு பிரிந்து விட்டனர். காதல் முறிவுக்கு பிறகு வேறு எந்த ஒரு நடிகரையும் திரும்பி கூட பார்க்கவில்லை இந்த நடிகை. தொடர்ந்து முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து வந்தார்.

இதற்குப் பிறகு வெகு காலங்கள் கழித்து இன்னொரு ஒரு நபருடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. இவர்களது காதலை வீட்டில் கூறினார் நடிகை. நடிகைக்கு ஏற்கனவே வயது அதிகமாக ஆகிவிட்டதால் இனிமேலும் தாமதிக்க வேண்டாம் என்று வீட்டில் உடனே சம்மதம் தெரிவித்து இருக்கின்றனர்.

எனவே இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு மட்டும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து 100 கோடிக்கு மேல் செலவு செய்ததாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு அதிகமான காசு கொண்ட பார்ட்டியாக மாப்பிள்ளையின் வீடு இருந்திருக்கிறது.

மாப்பிளை பெரிய இடம்:

இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் சூழ குத்தாட்டம் போட்டு இவர்களது கல்யாணம் சிறப்பாக நடந்து முடிந்தது. திருமணம் முடிந்து ஹனிமூனுக்கு இருவரும் ஒன்றாக சென்றனர். அங்கு தான்

 பிரச்சனைகளை சந்திக்க தொடங்கினார் இந்த நடிகை.

இந்த கணவரை பொருத்தவரை பகல் நேரங்களில் படு ரொமான்ஸாக இருப்பாராம். நடிகையை தாங்குதாங்கு என்று தாங்குகிறாராம். ஆனால் இரவு நேரங்களில் இவர் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.

எடுத்ததற்கெல்லாம் எரிந்து எரிந்து விழுகிறார் என்று கூறப்படுகிறது மேலும் நடிகையின் களைப்பை கூட பொருட்படுத்தாமல் இரவு முழுக்க அவரை தொந்தரவு செய்கிறாராம் இந்த கணவர். பொறுத்துக் கொள்ள முடியாத நடிகை ஹனிமூனை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீடு வந்து சேர்ந்திருக்கிறார்.

இந்த நிலையில் நெருக்கமான ஆட்களை அழைத்து இது குறித்து பஞ்சாயத்து வைத்திருக்கிறார் நடிகை. பிறகு கணவரை அழைத்து அவர்கள் புத்திமதி கூறியதை அடுத்து இனி இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொள்ள மாட்டேன் என்று கணவர் உறுதி அளித்திருக்கிறார்.

Check Also

அச்சச்சோ.. விஷயம் இதுதானா? கால் அழகிக்கு அடித்த ஜாக்பாட்!! வயிறு எரிந்த பேபி நடிகை..

திரையுலகில் கிடைக்கின்ற வாய்ப்புக்களை தக்கவைத்து முன்னணி நடிகையாகவோ அல்லது திரை உலகில் நிரந்தரமாக இருக்க பல்வேறு திரைமறைவு வேலைகள் நடைபெற்று …