தமன்னாவுடன் தனியாக அதிக நேரம் செலவிட ஆசை.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை தமன்னா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

தமிழ் திரை உலகப் பொருத்த வரை கல்லூரி படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய நடிகை தமன்னா அதனை அடுத்து முன்னணியில் இருக்கும் நடிகர் பலரோடும் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை தந்திருக்கிறார்.

நடிகை தமன்னா..

இந்நிலையில் அண்மையில் தமிழ் திரைப்படமான அரண்மனை 4 படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார் நடிகை தமன்னா.

மேலும் ரசிகர்களால் மில்க் பியூட்டி என்று அழைக்கப்படக்கூடிய இவர் ஹிந்தி மொழி படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருவதை அடுத்து பாலிவுட்டிலும் கலக்கி வரும் நடிகை தமன்னா ஒரு பேன் இந்திய நடிகையாக விளங்குகிறார்.

அதுமட்டுமா? பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவுடன் நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வருவதோடு திருமணம் எப்போது என்று அடிக்கடி இணையங்களில் கேள்விகள் கேட்கப்படும்.

அதற்கு விரைவில் என்ற வார்த்தைகளை தருவதோடு இருக்கும் இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்றும் உள்ளது.

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய தமன்னா அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விஷயங்கள் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருள் ஆகிவிட்டது.

தமன்னாவுடன் அதிக நேரம் தனியாக செலவிட ஆசை..

அந்த வகையில் இந்த பேட்டியில் கலந்து கொண்ட தமன்னா விஜய் வர்மா தனது திருமணம் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் அவர் என்னுடைய திரைப்படங்கள் வெளியாகுவதை குறித்த விஷயங்களை விட எங்களுடைய டேட்டிங் விசயத்தை அறிந்து கொள்ளத் தான் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறார்.

நான் முதலில் எந்த விஷயத்தை தெரிந்து கொண்ட போது அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் எனக்கு இது தற்போது பழக்கமாகிவிட்டது எனவே அது பற்றி கவலைப்படுவதில்லை. எனக்கும் தமன்னாவுக்கும் இடையே ஆன உறவு ஆழமான அன்பான பந்தம் தான் இருக்கிறது.

அது மட்டும் அல்லாமல் லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் நடிக்கக்கூடிய சமயத்தில் நாங்கள் டேட்டிங் செய்யவில்லை ஒரு பார்ட்டி மட்டுமே நடத்த திட்டமிட்டோம். மேலும் அந்தப் பார்ட்டியில் நான்கு பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

இதற்கு காரணம் நான் அந்த நேரத்தில் தனியாக தமன்னாவுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும் என விரும்பியதாக விஜய் வர்மா சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

பிரபல நடிகர் ஓப்பன் டாக்..

யாருமே எதிர்பார்க்க அளவிற்கு விஜய் வர்மா தற்போது பேசியது ரசிகர்களின் மத்தியில் காட்டு தீ போல் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் எப்போது திருமணம் என்று கேட்டிருக்கக் கூடியவர்களுக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது செய்து கொள்வோம் என்று சொல்லி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் திருமணம் என்பது பார்ட்டி அல்ல. அது ஒரு மிகப்பெரிய பொறுப்பு மற்றவர்கள் வேகமாக திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதால் உடனடியாக திருமணம் செய்து கொள்ளக்கூடாது. அதற்கு போதிய அவகாசம் தேவை என்று விஜய் வர்மா சொல்லி இருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …