தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் மும்தாஜ் தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் சிறுமிகளை துன்புறுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடிகை மும்தாஜ் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் மீது 18 வயதுக்குக் கீழான குழந்தைகளை வேலைக்கு அமர்த்துதல் தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மும்தாஜ்.
தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார் குறிப்பாக இயக்குனர் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தின் கட்டிபுடி கட்டிபுடிடா என்ற பாடலில் இவர் போட்ட கவர்ச்சி ஆட்டத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
தற்போது தனது சகோதரருடன் சென்னை அண்ணா நகரில் ஹெச் பிளாக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இவர் தன்னுடைய வீட்டில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
இந்நிலையில், நான் மும்தாஜ் வீட்டில் வேலை பார்க்கிறேன் அவர்கள் என்னை துன்புறுத்துவதாகவும் என்னை தன் தனது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்குமாறும் உதவிகேட்டு 19 வயதான இளம் பெண் ஒருவர் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து அண்ணாநகர் போலீசார் மும்தாஜ் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர். புகார் அளித்த அந்த இளம் பெண் வீட்டை விட்டு வெளியேறி அருகில் இருந்த மற்றொரு வீட்டில் வேலை கேட்டதும் அது தெரிந்த மும்தாஜ் வீட்டில் இருந்தவர்கள் அந்த பெண்ணைத் தேடிச் சென்று விரட்ட ஆரம்பித்ததால் பயந்துபோன அவர் காவல்துறைக்கு உடனடியாக தொடர்பு கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, விசாரித்ததில் நான் மட்டும் இல்லை என்னுடைய 17 வயதான தங்கையும் மும்தாஜ் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வருகிறார் என்று கூறினார். இதுகுறித்து அந்த சிறுமிகளின் தாயாரிடம் விசாரித்த போது ஆறு வருடங்களுக்கு முன்பு இருவரையும் மும்தாஜ் வீட்டில் வேலைக்காக கொண்டு வந்து சேர்ந்தேன் என ஒப்புக்கொண்டுள்ளார்.
அந்த சிறுமிகள் மும்தாஜ் வீட்டில் உள்ளவர்கள் எங்களை துன்புறுத்துவதாக கூறியதை தொடர்ந்து அந்த இளம் பெண்ணையும் சிறுமியையும் மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர் இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது